ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மனித நேயம்






                                                                 மனித நேயம்

                      மக்களிடம் அரிதாய்  கிடைப்பது  மனிதநேயம்
                       ஒரு சிலரே அரிதாய்  கொண்டுள்ள  குணம்
                       மனித நேயத்தை  என்றும்  காட்டிவிடு
                       அனைத்தையும் உன் வசமாக்கிவிடு !

                         உலகில் முடியாதது  என்பது  எதுவுமில்லை
                         துணிந்த  பின் துயரம் கொள்ள தேவையில்லை
                         சரியான  செயலை  செய்யும் பயம் கொள்ளவேண்டாம்
                         வழியில் பல இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்கவேண்டாம் !

                         குறைகளை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிறைகள் தெரியாது
                         புறம் கூறுபவனுக்கு  மனிதனின் மதிப்பு தெரியாது
                         எதிலும் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றியுண்டு
                         மனிதருள்  மாணிக்கமாய்  திகழ்பவர்களுமுண்டு !

                        பகைமை என்பது பொல்லாதது, நல்லவனிடம் அது இல்லாதது
                        மறந்தும் பிறருக்கு  கேடு விளைத்தல்  என்றும் கூடாது
                        உலகத்தை  பொது உடமை கருத்தினை விதைக்கவேண்டும்
              ஜாதி, இனம்  தவிர்த்து, வேற்றுமையில் ஒற்றுமை ஓங்கவேண்டும்

              அனுபவத்தை  காட்டும் பாடமே மிகச்  சிறந்தது
               அன்பையும், ஒழுக்கத்தையும்  நாம் கடைபிடிக்கவேண்டும்
               அன்பை காட்டி, பகுத்துண்டு வாழும்  எண்ணம்  வேண்டும்
               வாழவில் நன்மை செய்வதையே உயர்தந்தாக கருதவேண்டும் !

               ரா.பார்த்தசாரதி
               
                       

1 கருத்து: