திங்கள், 25 ஜனவரி, 2016

அம்மாவின் அருமையும்,பெருமையும்


   

அம்மாவின் அருமையும்,பெருமையும்


பத்து மாதம்  சுமந்தவளே
பத்தியம் இருந்து காத்தவளே
உதிரத்தை உணவாகக் கொடுத்தவளே   
பார்த்துப்  பார்த்து வளர்த்தவளே
அன்பையும் பண்பையும் தந்தவளே!

உயராத செல்வத்தால் எனைக் காக்க
அயராது உழைத்தவளே
ஆதிசக்தியாய் எனக்குக்
காட்சியளித்தவளே
அம்மா! என்றும் நீ என்னவளே!

 சிறு குழந்தையாய் இருக்கும்போது    
 உனது மடியே எனக்கு தொட்டில் 
 பருவமடைந்தாலும்,  உன் முந்தானை
தந்த – நிம்மதி…
இன்று அந்தச் சிந்தனையும்
தருகிறதே – அம்மா!

அ - என்ற எழுத்து  உயிர் எழுத்து 
ம் -   என்ற எழுத்து  மெய்யெழுத்து 
மா - என்ற எழுத்து  உயிர்மெய் எழுத்து 

உயிரும், மெய்யும் (உடலும் ) தந்தவள்   அம்மா


 ரா.பார்த்தசாரதி 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக