திங்கள், 25 ஜனவரி, 2016

இந்தியக் குடியரசு


                                                   இந்தியக் குடியரசு 

             அறுபத்தாராம்  ஆண்டு   குடியரசு தினத்தை  கொண்டாடுதே,
             இந்திய    நாடும்   உலகளவில்     வல்லரசு    ஆனதே ,
             உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே 
             வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதை  காண்கிறோமே !

             இயற்கை  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகியதே 
              நாடுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
             இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே 
              நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே!

              குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
                நாட்டின் முன் னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே 
              ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே ,
               மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே !

              நாடு  உனக்கு என்ன செய்தது என  கேட்காதிர்கள் 
              நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ,
             நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
             பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா  என்றும் விளங்குவோமே !

             ஜனநாயகத்தின்  குடைகீழ்   வளரும்  நாடு ,
              கலாசாரத்திலும்,  ஆன்மிகத்திலும்,  சிறந்த நாடு ,
              பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
              ணையற்ற  சந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!  


              ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக