புதன், 13 ஜனவரி, 2016

ஸ்ரீகந்தனின் உரைநடைக்கவிதைகள்




                                அழுதாலும்  மாண்டவர்  திரும்புவதில்லை 
                                ஆண்டவன் படைப்பில்  மாற்றமில்லை 
                                இளமை என்றும்  நிலைப்பதில்லை
                                ஈகைக்கு   என்றும் நிகரில்லை 
                                ஊரார்  வாய்க்கு  பூட்டில்லை 
                                எளிமைக்கு  ஈடு  இணையில்லை 
                                ஏற்றத்திற்கு என்றும் தடையில்லை 
                                ஐயம் என்பதற்கு  தெளிவில்லை 
                                ஒண்டிகட்டைக்கு  தனி வீடு தேவையில்லை 
                                ஓதுவதற்கு  நல்ல ப்ரோஹிதர்கள் இல்லை 
                                ஔடத்தில் ( மருந்தில்) கலப்படம் இல்லாமல் இல்லை. 
                                அக்தே மனிதனுக்கு துன்பம் தராமல் இல்லை !
====================================================================  

     கடமையை  செய் ! பலனை எதிர்பார்க்காதே என்றது  பகவத்கீதை !
     கடமையை  செய்தேன், பையனை கலெக்டருக்கும் படிக்க வைத்தேன் 
     கடைசி வரை,  பலனை  எதிர்பார்கவில்லை 
      கடைசியில் தன் கடைமைச்  செய்தான்  என் மகன்.
     கடற்கரைக்கு  அருகிலுள்ள  முதியோர் இல்லத்தில் சேர்த்தான் 
    கவலைப் படாதே என்றான்   கடமைக்காகவும் பார்க்கவரவில்லை,
    எந்த பலனும் எதிர் பார்கவில்லை 
    பகவத் கீதை, தத்துவம் புரிந்ததா  உங்களுக்கு !
-----------------------------------------------------------------------------------------------------------------------------

                               தாய்  அன்பில்  கலப்படம் இல்லை

                               தாய்  பாலில்      கலப்படம் இல்லை

                               தாய்  மொழிக்கு  ஈடே தும்  இல்லை 

                              தாய்  நாட்டிற்கு  இணையேதும் இல்லை !
=======================================================================
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக