ஞாயிறு, 31 ஜனவரி, 2016

முதுமையும், முதியோர் தினமும்




                              முதுமையும், முதியோர் தினமும்  

முதுமை என்பதே மனிதனின் அனுபவ முதிர்ச்சி
உடலும் உள்ளமும் சற்றே  அடையும் தளர்ச்சி
துணை  தடுமாறினாலும் மனம் கொள்ளும் எழுச்சி
வீ ழ்ந்தாலும்  கைகொடுத்து தூக்கிவிடும் முயற்சி !

அனுபவத்திற்கும், வயதிற்கும், மதிப்பு  இல்லை
பெற்றதும்  உடன்பிறந்ததும் உதவ நினைப்பதில்லை,
ஏனோ கடனுக்காக  உதவும் நிலைமை  இங்கே
உள்ளத்தில் கலங்கும் முதுமைக்கு நிம்மதி எங்கே !

அடிபட்டு, இடம் தேடித், தட்டிதடும்மாறும் நெஞ்சங்கள்
பாசத்தினால் விடுபட முடியாத  முதியோரின்  எண்ணங்கள்
இளம் ஜோடிகள் போல் காதலும், காமமும்  இல்லை
முதிர்ந்த காதல்தான், ஆனால்  காமம் இங்கில்லை  !

முதுமை காதல் என்பது தாஜ் மஹாலின்  நினைவு
இளமைக் காதல் என்பது மனக் கோட்டையின் வளைவு !
இன்று  முதுமையின் அடைக்கலம் முதியோர் இல்லங்கள்
இதனை  மாற்றாதோ  இளமையின்  எண்ணங்கள் !

வாழைக்கன்றும். நெல்நாற்றும் பிரிந்தால்தான்  வளரும்
இளமையில் சேர்ந்தும், பருவத்தில் பிரிந்து வாழும் மனித இனம்,
தன்  மகனை  சான்றோன்  என பிறர்  சொல்லும் பெருமை தந்தைக்கே
பிரிவு உண்டானாலும், நன்றாக இருக்கட்டும் என நினைக்கும் பெற்றோரே !

தனிமை பட்டாலும், என்றாவது  கூடுவோம் ஏங்கும்  நினைப்பே ,
பந்த பாசத்திற்கு  கட்டுப்பட்டு  உயிரை கையில் பிடித்து வாழும் தவிப்பே ,
ஆணிவேராய்  இருந்து வெளிகாட்டி முடியாத  நிலைமை,
பண்பாட்டையும், பாரம்பரியத்தை  காப்பாற்றுகிறோம் எனும் பெருமை !

தனக்காக  வாழாது  பிறருக்காக வாழும்  முதுமை
என்றும் உறவுக்கும், பாசத்திற்கும் ஏங்கும் தனிமை
இளமையின்  முதிர்ச்சியே  மனித இனத்தின்  முதுமை
முதியோர் தினத்தை கொண்டாடுவோம் முதியோருடனே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக