திங்கள், 11 மே, 2015

படக் கவிதை-12

                                                              படக் கவிதை-12


ஒரு மாற்றுதிறனாளியை  ஊக்கப் படுவதற்காக எழுதுகின்றேன் 

பயிருக்கு காவலாய் அன்றாடம் வந்து நிற்கின்றேன் 
குத்தகைக்கு கொடுத்து விட்டு பையிரிடமுடியாமல் தவிக்கின்றேன் 
இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கமுடியவில்லை 
என் குடும்பத்தின் நிலை கண்டு அவர்களின் பசி தீர்க்கமுடியவில்லை!

பயிர் செய்யவும்  வழி தெரியவில்லை, உடம்பும் ஒத்துழைக்கவில்லை  
நான் ஒற்றைக் கால் நொண்டியானாலும் எனது நம்பிக்கை முடமாகாது,
என் குடும்பத்தை தவிக்கவிட  மனமில்லை, வாழா வழி செய்வேன் 
ஒருவனை பலூன் விற்கவும்,  துணைக்கு ஒரு பிள்ளையும் இருக்கிறதே !

என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறன்னுண்டு 
வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !


  ரா.பார்த்தசாரதி 






   






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக