வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தாயின் குணம்.


                                                  தாயின் குணம்.

சிறகு ஒடிந்த  பறவைபோல்  சம்மந்தமில்லா  வாழ்கை
ஒவ்வொருடைய வாழ்கை  ஆரம்பித்த இடமே வேறு,
நதியாய்  இருந்து  கடலில்  கலப்பதும்  ஒன்று,
நதியாய் இருந்தவர்கள் உபயோகமற்று இருப்பதும்  இன்று.

பணத்தினால் நாங்கள் தோற்றாலும், பாசத்தில் தோற்கவில்லை ,
பாசமும், அன்பும், இரு கண்கள் என உறவுகள் நினைப்பதில்லை 
சிறு வயதில், மகனையும், மகளையும் , தாங்கிய குடும்பம்,
இன்று தனிமை பட்டு உதவிக்கும், பாசத்திற்க்கும்  ஏங்கும் காலம்

பணம் எட்டிப்  பார்கின்றதே, பாசம் தொலைவில் நிற்கிறதே
பண்பும், பாசமும்,  பணத்தினால்  என்றும் மாறுபடுகிறதே .
முதலில் இருந்த நிலையை எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை.
நல்லதை மறந்து, கெட்டதை  மறக்க நினைப்பதில்லை.

தாய், தந்தை  பிள்ளைகளை இரு கண்கள் என  கருதினாலும்,
ஏதோ  ஒருவிதத்தில்  கருத்து  வேறுபாடு  இருந்தாலும்,
என்றோ ஒருநாள்  திருந்தும் நேரம்  வந்தாலும்,
அன்று இருந்த நிலை, இன்றைய நிலை வேறுபட்டு இருந்தாலும்,

பிள்ளைகளின் வெளிநாட்டு வேலை, சூழ்நிலை வேறாகயிருந்தாலும் 
பாசம்முள்ளவர்களாக  காட்டி உடல் உழைப்பை  சுரண்டிவந்தாலும், 
இன்று   கடைசியில்  பெற்றோர்கள் நாடுவதோ  முதியோர் இல்லம்.
முடியாவிட்டாலும், முடிந்ததை  செய்வதே ,தந்தை,தாயின்  குணம்.

ரா.பார்த்தசாரதி 

   .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக