வியாழன், 19 பிப்ரவரி, 2015

அந்தமானை காண வாருங்கள்




                                            அந்தமானை  காண  வாருங்கள்

                அழகியத்  தீவு,  அந்தமான், கடலின் நடுவே அமைந்த தீவு.
                 தென்னையும், கமுகும்,ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும் தீவு.
                 இந்திய நாட்டின்  அமைதி  பூங்காவாக காணப்படும்  தீவு.
                  மனிதனுக்கு  மனஅமைதி  தந்திடும் ஓர் அமைதியான தீவு !

                  வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்,
                  கடல் அடியில் சென்று  கடல் இனங்களை காணும் மக்கள்,
                   நீச்சல் தெரியாதவன் கூட, கடல் அடியில் நடை போடுகிறான்,
                  ஆங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களை கண்டு களிக்கின்றான்!

                  சிறு படகும், இயந்திர படகும், பயணிக்கும் மக்கள்  கூட்டம்,
                  மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
   .              கடலோர கவிதைகள்  எழுத,  மனிதனுக்கோர்  கண்ணோட்டம் ,
                   காண்பதை வார்த்தையால் வடிபதே கவிஞ்சனுக்கு கொண்டாட்டம்!

                   சுற்றுலா  பயணிகள்  நாடி வரும்  தீவு,
                    இரு தீவானாலும், ஒன்றில் பழந்குடியினர் வாழும் தீவு
                   தேசத் தியாகிகள், பட்ட துன்பங்களை சித்தரிக்கும் தீவு
                    நாட்டைவிட்டு, தள்ளி இருந்தாலும், தனிமை கொண்ட தீவு.,      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக