வியாழன், 26 பிப்ரவரி, 2015

சிரிப்பு

                                                 

                                                   சிரிப்பு  


அண்ணாந்து சிரித்தாலும்,  குனிந்து  சிரித்தாலும்,
வாய்மூடி சிரித்தாலும்,  சிரிப்பே  ஓர் மருந்தாகும் !

பெண் இனத்திற்கும், ஆண் இனத்திற்கும், பொதுவாகும்,
ஆம், வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.!

இறைவன் மனித இனத்திற்கு கொடுத்த சொத்தாகும் 
மாக்களுக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும் 

பொம்பளைச் சிரிச்சா போச்சு,  புகையிலை விரிச்சா போச்சு,
பெண்ணே உன் வாழ்வு, இன்று என்ன ஆச்சு !

பெண்ணே  நீங்கள் வாய்விட்டு சிரிப்பதேன்?
உங்கள்  ஏழ்மை  நிலையை மறப்பதேன்!

திரௌபதி  சிரித்ததால்  வாழ்வு  சிதிலமடைந்ததா 
மாதவி  சிரித்ததால்  கோவலன் வாழ்வு முடிவூற்றதா !

சிரிக்கத் தெரிந்தவர்களே  சிந்திக்கத் தெரிந்தவர்கள் 
மற்றவர்களை  என்றும்  சிந்திக்க  வைப்பவர்கள்! 


ரா.பார்த்தசாரதி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக