சனி, 19 ஜூலை, 2014

நினைக்கத் தெரியாத மனமே



                                                 நினைக்கத் தெரியாத  மனமே 

ராகவன் மும்பையில் உள்ள பெரிய நிறுவனத்தின் பொது மேலாளர் .
அவருக்கும் அவர் பிள்ளைக்கும், வலது கையில் ஆறு விரல். அது 
அவருக்கு அதிர்ஷ்டமாகவே எல்லாம் நடந்தது.  அவர் பிள்ளை முரளி  இவர்க்கு நேர்மார் ஊதாரி, ஒரே பிள்ளையாக இருந்ததால்,அவன் அம்மா 
நிர்மலா அவனுக்கு செல்லம் கொடுத்து, கணவனுக்கு தெரியாமல் பணம் 
கொடுத்து அவனை கெடுத்தாள்.  ஒரு ராகவன் கோபமாக பேச யாருக்கும்   சொல்லாமல், கொள்ளாமல்  வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தான் .ஒரு கம்பெனியில் காப்பி, டி  சப்பிளையராக மூன்று வருடங்களாக வேலை செய்து கொண்டு .  மும்பையில் தன்னால் கைவிடப்பட்ட வடநாட்டு பெண்ணிற்கும், தன் மகனிற்கும் மாதம் ஒரு சிறுதொகை அனுப்புவான்.அம்மாவிடம் ரொம்ப பாசம்.  அவளை நினைக்காத நாள் இல்லை.வீட்டிற்கு நாள் கிழமை கூட செல்வதில்லை

வருடா வருடம் ஐய்யப்பன் கோவிலுக்கு மட்டும் போய்வருவான். ஒரு நாள் ராகவன் சென்னையில் உள்ள தன் கம்பெனியில் இன்ஸ்பெக்ஷன் வந்தார்.  கூடவே மேனேஜர். சற்று டீ , காப்பி தாடியுடன் முரளி வருவதை அறிந்து, இந்தாப்பா இங்கே வா சாருக்கு ஒரு காப்பி கொடு என்றார் .  ராகவனுக்கு கொடுக்கும் போது கை நடுங்கி அவர்காலில் கொட்டிவிட்டான் .  உடனே தன் கைகுட்டையால் துடைக்கும் போது ராகவன் ஆறாவது விரலை பார்த்துவிட்டார்.   உடன் இருந்த மேனேஜர் அவனை முட்டாள் முரளி என்று   திட்டி, அன்றைக்கே வேலையை விட்டு. போகச் சொன்னார்.

ராகவன் அவனுக்கு தாடி இருந்ததால் அவனை அடையாளம் தெரியவில்லை. மேனேஜர் அவன் பெயரை வைத்து திட்டியதால்.  
ராகவன் தீர்மானித்தார் தன் மகன் என்று.

ராகவன் அந்த மேனேஜரை  பார்த்து நல்ல டெஷிஷன் எடுத்திங்க.
 பிறகு ராகவன் தனிமையில் கூட்டு கம்பெனிக்கு வெளியே நிற்கச் 
சொன்னார்.  அவனை காரில் ஏற்றிக்கொண்டு வழியில் காரை ஒரு
ஹோட்டலுக்கு போகச் சொன்னார் .ரூமிற்கு சென்றதும் அவனை 
அருகில் அழைத்தார்.  அவன் அவர் காலில்  விழ்ந்து மன்னிப்பு கேட்டான் .
அப்பா உங்களுக்கு காப்பி கொடுக்கும் போதே உங்க விரலை 
பார்த்தேன்.   ராகவனும் , நானும் நீ என் காலை துடைக்கும்போதே 
பார்த்துவிட்டேன்.

அன்று இரவே அவனை மும்பைக்கு அழைத்து சென்றார்.  அப்பா,
அம்மா எப்படி இருக்க என்றான். நீயே வந்து பார் என்றார் மனதில் 
துக்கத்தை வெளிபடுத்தாமல்.  மும்பை சென்றதும் அம்மா என்று 
ஆசையுடன் உள்ளே நுழைந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவள் 
படத்திற்கு மாலை போடப்பட்டு இருந்தது.  மிகவும் கண்கலகினான் .
கடைசி காலத்தில் என்னையும், உங்க அம்மாவையும், 
மதுமிதா தான்  கவனித்தாள். நானும் என் மகள் போல 
பார்த்துக்குறேன். அவள்   பையனும் நல்லா  படிக்கின்றான். நம்ம 
வீட்டில்   சின்ன, சின்ன வேலை செய்கின்றான் என்றார். மது, மது 
காப்பி கொண்டுவா என்று குரல் கொடுத்தார்.அவளை பார்த்ததும்
திடுக்கிடான்.  அவன் மனைவியே அங்கிருப்பதை கண்டு. அப்பா 
மன்னித்து விடுங்க. இவள் உங்க மகள் இல்ல, மருமகள் என்றான்.
முரளியும் என் மனம் ஒரு நாள் கூட நினைக்க தெரியாமல் இருந்து 
விட்டதே.  எல்லாம் ஐய்யப்பன் அருள் என்று மனதில் நினைத்து 
கொண்டான்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக