பெண் அன்றும், இன்றும்
அன்று பெண் குழந்தை என்றால் ஏன் பிறந்தது என்ற கேள்வி ?
இன்று பெண் வீட்டின் மஹாலக்ஷ்மி பிறந்தது என்ற மகிழ்ச்சி
அன்று அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு என கேட்கப்பட்டது
இன்று குடும்பத்தின் பல்கலைக்கழகம் என போற்றப்படுகிறாள்.
அன்று பிறந்த வீட்டிற்க்கும், புகுந்த வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்ட
ஓர் ஊஞ்சல்
இன்று கணினியோடு காவியம் படைக்கின்றாள்.
இல்லத்திற்கும் அலுவலகத்திற்குமாய் அலைபாய்ந்து வாழ்வைப்
பலப்படுத்தும் அஸ்திவாரம் -பெண் திகழ்கின்றாள் இன்று !
அறிவைத்தானே பெருக்கச்சொன்னேன்,ஆடையை நானா
குறைக்கச்சொன்னேன் என்றான் பாரதி சொன்னாலும்
இன்று, காவல்துறையிலும், விளயாட்டுத்துறையிலும், பெண்
முன்னேறுவதை கண்டு, ஆணுக்கு, பெண் நிகரே என்று சொல்வார்.
வள்ளுவனுக்கு வாசுகி, சிவாஜிக்கு ஜீஜாபாய், காந்திக்கு
கஸ்துரிபாய், ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு சாரதா தேவி,
உதாரணங்கள் ஆணின் வெற்றிக்கு பெண்ணே பின் நிற்கிறாள்
பல்லாயிரம் பெண்கள் பாதகங்களைச் சாதகமாக்கி உலக
வரலாற்றில் உலாவருவதை காண்கிறோம் !
கல்வி துறையிலும், காவல் துறையிலும், விண்வெளி, ஆன்மீகம்,
என பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தரணி எங்கும் பெண்ணின் தடம்பதிப்பு ! எனும் உண்மைக்கு
மறுப்பு சொல்வார் உண்டோ !
விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
பெண்மைக்கே உரிய நளினங்கள்தான் !
இன்று பெண் வீட்டின் மஹாலக்ஷ்மி பிறந்தது என்ற மகிழ்ச்சி
அன்று அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு என கேட்கப்பட்டது
இன்று குடும்பத்தின் பல்கலைக்கழகம் என போற்றப்படுகிறாள்.
அன்று பிறந்த வீட்டிற்க்கும், புகுந்த வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்ட
ஓர் ஊஞ்சல்
இன்று கணினியோடு காவியம் படைக்கின்றாள்.
இல்லத்திற்கும் அலுவலகத்திற்குமாய் அலைபாய்ந்து வாழ்வைப்
பலப்படுத்தும் அஸ்திவாரம் -பெண் திகழ்கின்றாள் இன்று !
அறிவைத்தானே பெருக்கச்சொன்னேன்,ஆடையை நானா
குறைக்கச்சொன்னேன் என்றான் பாரதி சொன்னாலும்
இன்று, காவல்துறையிலும், விளயாட்டுத்துறையிலும், பெண்
முன்னேறுவதை கண்டு, ஆணுக்கு, பெண் நிகரே என்று சொல்வார்.
வள்ளுவனுக்கு வாசுகி, சிவாஜிக்கு ஜீஜாபாய், காந்திக்கு
கஸ்துரிபாய், ராமகிருஷ்ணா பரமஹம்சருக்கு சாரதா தேவி,
உதாரணங்கள் ஆணின் வெற்றிக்கு பெண்ணே பின் நிற்கிறாள்
பல்லாயிரம் பெண்கள் பாதகங்களைச் சாதகமாக்கி உலக
வரலாற்றில் உலாவருவதை காண்கிறோம் !
கல்வி துறையிலும், காவல் துறையிலும், விண்வெளி, ஆன்மீகம்,
என பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தரணி எங்கும் பெண்ணின் தடம்பதிப்பு ! எனும் உண்மைக்கு
மறுப்பு சொல்வார் உண்டோ !
விட்டுக் கொடுப்பதும் தட்டிக் கொடுப்பதும்
பெண்மைக்கே உரிய நளினங்கள்தான் !
பெண்ணே, கம்பனும், காளிதாசனும், கூறிய இலக்கணத்தை
பொய்யாகி காட்டு
மெல்லினத்தோடு வல்லினத்தையும் இணைத்துப் பார்!
பெண்ணே !உன் இளம்கரங்கள் இரும்புக் கரங்களாகட்டும்!
கேள்விக் குறியிலிருந்து பெண்ணினம் விலகட்டும் !
ஆச்சிரியக் குறியாய் மாறி அகிலத்தையே இனி ஆளட்டும் !
ரா.பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக