மெழுகு போன்று ஒளி தந்து தன்னை
தானே உருக்கி ஒளி தருவது போல்
உங்கள் வாழ்க்கை மெழுகு போல்
உருகி கொண்டிருந்தாலும் பிற உயிரை
காத்திட்டு தன்னுரையும் மதிக்காமல்
சேவை செய்திடும் மனித தெய்வங்களே !
இரவு பகல் பாராமல் விழித்திடும் கண்களே !
உயிரைக் காக்கும் உயர்ந்த மந்திரமே !
வழியறிந்து மருந்தளிக்கும் தெய்வத்தின் தூதரே !
என்றும் மனித சமுதாயத்தில் நீங்கள் என்றும்
உன்னத \மாண்பும், மாட்சிமையும் கொண்ட
மருத்துவர்களே ! வாழ்க வளமுடன் !
ரா.பார்த்தசாரதி
----------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக