செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018






                                சுதந்திரத்திற்கு சுதந்திரம் இல்லை


எழுபத்திரண்டு  ஆண்டுகள் சுதந்திர  காற்றை சுவாசித்தோமா 
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து செயல்படுகின்றோமா 
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா 
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா !

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில், அநீதி எனும் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
தேசத்திலும், அந்தமான், சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞ்சர் கருணாநிதி



                                       

                                                கலைஞ்சர்  கருணாநிதி


 உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே என்று அழைக்கும் தலைவா
 இனி.  அந்த காந்த குரல் கடற்கரை காற்றில்  கலந்து விட்டதா
 உலக தமிழரின் உயிர் மூச்சே,  சுண்டி இழுத்தது உன் பேச்சே
 ஒன்றா, இரண்டா உன் சாதனை, ஏட்டில் அடங்கா உன் போதனை !

 உதயசூரியன் மறைந்து விட்டது, இதய காவியம் இறந்துவிட்டது \
 உன்  கவிதையும்,வசனமும் மனத்தினில் நின்று நிழலாடுது 
 உன் குறளோவியமோ வள்ளுவனேயே  நினைக்ச்  செய்கின்றது  
வள்ளுவர்கோட்ட குறள்  ஓவியமே, நீ என்றும் நிலைத்த காவியமே!

 உன் பேனா குனித்தாலும் உன் எழுத்துக்கள் நிமிர்ந்தே நிற்கின்றது 
 தமிழே  உன்னால்  செம்மொழியாய் சிறப்புடன் உலகில் திகழ்கின்றது 
 தமிழின் பெருமையை உலக தமிழ் மாநாட்டால்  சிறப்புற செய்தாய் 
 மெரினாவில் அண்ணாவின் பக்கத்திலேயே  இடம் பிடித்தாய் !  

 கலைஞ்சன்  இருக்கும்போது யாரும்  அவர் செய்ததை  புகழ்வதில்லை  
 அவர் இறக்கும்போது யாரும் அவரை புகழாமல்  இருந்ததில்லை  
 உன் போல் எந்த தலைவனுக்கும், உலகமே  அழுததில்லை 
 உயிர் பிச்சை கேட்டு இறைவனை என்றும் தொழுததில்லை

உன்னைப்போல், சொல்வல்லன் சோர்வு அடைவதில்லை 
உன் சொல்லாலே எதிரியை வீழ்த்த என்றும் தயங்குவதில்லை 
தடைக்கற்கள் உண்டெனினும் தடத்தோள்கள் உண்டு என்றவரே 
எதிர்த்து நின்றரோர்  தமையெல்லாம் எளிதாக வென்றவரே !

முத்துவேலர்,அஞ்சுகம் பெற்று எடுத்த முத்தமிழ் காவலரே 
அரசியலிலும் சாதனை படைத்து, இன்று சரித்திரமானாய் 
உன் திறமையால், உன்னத தலைவனாய் உருவெடுத்தாய் 
உன் இடம் வெற்றிடமே, உன்னை என்றும் மறவாது தமிழினமே !


ரா.பார்த்தசாரதி 





வியாழன், 5 ஜூலை, 2018

Nayaghara Nathiye




                          நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !

1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை 

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !    
       
3.
 மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
  
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா ! 
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே  !  நின் அணையினால்  மின் சக்தி    தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

திங்கள், 25 ஜூன், 2018

Face Book Message




  Face Book Message Sent by Mr.Shankar  - Advocate


தொடர்புகளுக்கு அனுப்பவில்லை என்றால், இந்த செய்தியை அனுப்பாமல் உங்கள் தொடர்புகள் அனைத்தையும் இழந்து வருவதால் உங்கள் கணக்கு செயலற்றதாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதுப்பிக்கப்படும், புதிய வடிவமைப்பு மற்றும் அரட்டைக்கு ஒரு புதிய வண்ணம் இருக்கும். பேஸ்புக் பயனர்களே, நாங்கள் பேஸ்புக்கு புதுப்பித்து 23:00 p.m. இந்த நாளில் 05:00 a.m. வரை. உங்கள் எல்லா தொடர்புகளுக்கும் இதை அனுப்பவில்லை என்றால், புதுப்பிப்பு ரத்துசெய்யப்படும். உங்கள் பேஸ்புக் செய்திகளுடன் அரட்டை செய்ய உங்களுக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் அடிக்கடி பயனாளராக இல்லாவிட்டால் நீங்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். உங்களிடம் குறைந்தபட்சம் 10 தொடர்புகளை வைத்திருந்தால், இந்த SMS அனுப்பவும், நீங்கள் ஒரு பயனர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் குறிக்க லோகோ சிவப்பு நிறமாக மாறிவிடும் ... நாங்கள் அதை இலவசமாக முடிக்கிறோம். நாளை அவர்கள் 0.37 சென்ட்டுகளில் ஃபேஸ்புக்கிற்கான செய்திகளை சேகரிக்கத் தொடங்குகின்றனர். இந்த செய்தியை உங்கள் 9 க்கும் மேற்பட்ட தொடர்புகளுக்கு அனுப்புவதோடு, உங்களுக்காக வாழ்வதற்கு இது இலவசமாக இருக்கும். பார் மற்றும் பந்து பச்சை மாறும். அதை நீங்கள் பேஸ்புக் இப்போது இலவசமாக பார்க்க வேண்டும். செலவில்லாமல் உங்கள் சேவையை மீண்டும் செயல்பட 10 நபர்களுக்கு அனுப்பவும்.

ஞாயிறு, 24 ஜூன், 2018

Thirumana Naal




                                                            

                                                                  திருமண நாள் 



உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ 
இலத்தரசனும்அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் . 

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக 
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக 
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து 
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க 
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான 
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி  - 8148111951

சனி, 23 ஜூன், 2018

மிச்சத்தை மீட்போம்





                                                    

                                                         மிச்சத்தை மீட்போம் 


           பழைய  தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா 
           இன்றைய தலைமுறைப் பண்புகளை  மேற்கொண்டோமா 
           தலைமுறைகள்  மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை 
          தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !

           வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே 
           நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே
           பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து  நடப்போம்
           வரும்  தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !

          பசுவும், தன் பாலை  மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்
          அதனிடம் கருணை காட்டாது  தன் பசிக்காக அதனை கொல்வோம்
           ஆடு,மாடுகள் உண்ட  மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது
          மனிதனின் மிச்சமோ மனிதனையே  தீண்டத்தக்கதாக அமைகிறது !

         மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே
        பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே
        ஏழை, பணக்கார ஜாதி என்றும்  தலை தூக்கி  நிற்குமே
         பணக்காரர்கள் போட்ட  மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !

         ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து  இறக்கின்றான்
         தன் ஏழ்மையை  என்றும் தானமாக விட்டு செல்கின்றான்
         பணக்காரகளின் செல்வம் அவன்  தலைமுறைக்கேச்  சேருகிறது
         மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !
       
         ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா
         ஏழையாய்  இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா
         வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா
         விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !
       
         
         
         ரா.பார்த்தசாரதி 
           

Padakkavithai Potti 166




                                              படைக்கவிதை போட்டி 166


                தன்  மகனுக்கோ, கணவனுக்கோ
                தேநீர்  ஆற்றும்  பெண்மணியே !

                வாய் பொறுக்கும் சூட்டிற்கு குடிக்க ஆற்றுகின்றாய்
                உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காக பணிசெய்கின்றாய் !

                கொடுத்திடும்  உன் தாயன்பிற்கு  ஈடு இணையில்லை
                உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை !

                இன்முகம் காட்டி, பாசத்தை தேநீரில் கலந்து, மகிழ்ந்து
                கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்ப பெண்மணியே !

                களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாகப் பானம்
                உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும் !


                 ரா.பார்த்தசாரதி