வெள்ளி, 7 ஏப்ரல், 2017

Ilamaiyin Kelvi



                                                    இளமையின்  கேள்வி 

                     என் இளமையின் கேள்விக்கு  என்ன பதில் 
                    அழகிய காதல் தேவதையே நீயோ என் எதிரில்,
                    என் தேவைகள் குறைவாய்  இருந்திடுமே 
                    நின் அழகே  என் மனத்தைக் கவர்ந்திடுமே !
                    நீ ஆயிரத்தில் ஒருத்தி  என்பதை நானறிவேன் 
                   என் ஒவ்வொரு அணுவின் உணர்வும் சொல்லிடுதே 
                   உன் எழிலை என் மனம்  சொல்லிடாதா 
                   காலம் கடந்தாலும், நம்மை வாழ வைத்திடாதா !

                  காதலிக்கும் போது  அவசரம் ஆகுமா 
                  பூத்து குலுங்கும் விழிகள் காத்திருக்குமா,
                  காதல்  என்பது இரு விழிகளின்  நேசமா 
                 அதுவே அவர்கள் கண்ட காதல் தேசமா !

                 காதலுக்கு பொருள் விளங்காமல் தவித்தேனே 
                 பூமழை மேனியாய் பொழிவதைக் கண்டேனே 
                காதலின் பார்வை  புதிரா !  புதினமா !
                என் நெஞ்சை சுற்றிவரும் ராட்டினமா !

                 தாமரை இதழ் போன்ற உன்  வதனமே 
                 உன் முகம் நீரில் தெரியும் சந்திர பிம்பமே 
                காதலில்  தாமதம் செய்து என் பொறுமையை சோதிப்பாயா 
                தாமதம் செய்யாமல் என்னை  மகிழ்விப்பாயா !

                ரா.பார்த்தசாரதி
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக