வியாழன், 27 ஏப்ரல், 2017

நினைக்கத் தெரிந்த மனமே






                                           நினைக்கத்  தெரிந்த  மனமே

நாள்தோறும் நடக்கும்
சாலை விபத்து
செய்திகளை படிக்கும்போது
பதை பதைக்கிறது மனம்!

இரக்கமில்லாமல் கலப்படம்
செய்யும் அரக்கர்களை கண்டு
எதிர்க்க முடியாமல்
கொதிக்கிறது மனம்!

ஜாதி, மதச் சண்டையிட்டு
மண்டை உடையும்
வெறியர்களை பார்த்து
பரிதாபப்படுகிறது மனம்!

நாடுகள் வேறாக இருந்தாலும்
அப்பாவிகளை கொல்லும்
தீவிரவாதிகளின் செயல் கண்டு
வெறுக்கிறது மனம்!

சிரித்தபடியே
சிறை செல்லும் ஊழல்
அரசியல்வாதிகளை பார்த்து
காறி துப்புகிறது மனம்!

கோடி கோடியாக கொட்டி
எடுக்கும் திரைப்படங்கள்
காதலுக்காகவே உயிர் விடுவது
கண்டு சிரிக்கிறது மனம்!

மக்களின் அறியாமையையே
மூலதனமாக்கி பணம் சேர்க்கும்
ஆன்மிகவாதிகளின் திறமை கண்டு
சினம் கொள்கிறது மனம்!

இப்படி தினமும்
நம் எல்லாரின் மனமும்
பல உணர்வுகளை கொட்டுகிறது
நமக்கு வேறு வேலை வரும் வரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக