சனி, 22 ஏப்ரல், 2017




                                                    உலக புத்தக தின விழா

காகிதத்திற்கு  இரு பெருமை  உண்டு 
ஒன்று பணமாகவும், பு த்தகமாவும் மாறுவதுண்டு ,
புத்தகத்தை கொண்டு ஆசிரியர் பாடம் நடத்துவதுண்டு 
அதன் வாயிலாக மாணவர்கள் அறிவை பெருக்குவதுண்டு!

புத்தகம் படிப்பினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு 
படிக்காத மேதைகளும் இவ்வுலகில்  உண்டு 
அறிவை விரிவாக்கும் கருவியே  புத்தகம் 
மனிதனை  தனிமை படுத்தாத நண்பனே புத்தகம்!

சமுதாயத்தில் மக்கள் வாழ்க்கையை உயர்த்துவதும் புத்தகமே
அதிக புத்தகம் படிப்போரை  அறிவாளியாக உலகம் கருதுமே 
நமது கலாசாரத்தின் தொன்மையை பறைசாற்றியது புத்தகமே  ,
புத்தகதினால்  சிந்தையின் வெளிப்பாடும், அறிவும்  விரிவாக்குமே ! 

நம் அறிவின் ஆன்மா புத்தகத்தில்தான் ஒளிந்திருக்கு 
மனிதனின் அறியாமையை அழிக்கும்  ஒளிவிளக்கு 
நல்ல புத்தகங்களுக்கு  என்றும் மதிப்புண்டு 
ஏப்ரல் இருபத்திமூன்றாம் தேதி உலக புத்தகமாக கருதுவதுண்டு !


ரா.பார்த்தசாரதி

 
 
 
 

 


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக