ஞாயிறு, 19 மார்ச், 2017




                                                     உரைத்திடும் உண்மைகள்

          நடந்து திரிந்தால் நலனுன்னைச்  சேரும்
           கிடந்தால், படுத்தால் பாயும் பகையாகும்

            தினமும் பழங்களை உண்டால் பலன்னுனை சேரும்
             அதிகாலை எழுந்து நல்ல காற்றை,சுவாசித்திடு

              பயிற்சிகள்  செய்தால்,  உயர்ச்சியைத் தொடுவாய்
              அயர்ச்சி அடைந்தால்  முயற்சியினை விட்டுவிடுவாய் !

              தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்த்திடுவாய்
               வளர்ச்சியினை நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

                போதனை கேட்டிடல்  சாதனை  ஆகுமே
                 வேதனை             
            
..

போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே
வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே
மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்
காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

இறைவனை எண்ணினால்
இன்புடன் வாழலாம்
குறையெலாம் அகன்றுநீ
நிறைவுடன் வாழலாம்
கறையுடை மனத்தினை
காணாமல் செய்திடில்
உலகினில் உன்னதம்
உன்னுளே உதித்திடும் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக