செவ்வாய், 21 மார்ச், 2017

லட்சுமி ஷ்ஷடியப்தபூர்த்தி வாழ்த்து மடல்




 

                        திரு. பாஸ்கரன் ஷ்ஷடியப்தபூர்த்தி   வாழ்த்து மடல்

இடம்:அகிலாண்டேஸ்வரி சமேத                                    தேதி :31-03-2017

             ஸ்ரீ  ஜலகண்டேஸ்வரர் கோவில்,
             வேலூர்                                                                                                                                                                              
 ஸ்ரீ  கரதூஷணப் பெருமாள் துணையுடன்,அகிலாண்டேஸ்வரி சமேத 
 ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் அருளோடும்   ஓர் ஷ்ஷடியப்தபூர்த்தி விழா 
 திரு.பாஸ்கரனுக்கும்,திருமதி லட்சுமிக்கும் நடைபெறும் மணி விழா

 அகவை அறுபதும், எண்பதும்  என்றும் சிறப்புடையந்தன்றோ 
 இரு மகன்கள் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ

 ஷ்ஷடியப்தபூர்த்தி என்பதே அகவை அறுபத்தின் நிறைவாகும் 
 உற்றார், உறவினர்களின்   வாழ்த்துக்கள் நிறைந்ததாகும் 
அகிலத்தில் சிறந்தது தாய், தந்தையினரின்  வாழ்த்தாகும் ! 

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தாங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !



கணவன்  என்றாலே (கண் + அவன் ), கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !


.முதுமையை  இளமையாக்கி தினமும்,நடைப் பயிலுகின்றார்  
ஓய்வு பெற்றாலும், உடல்நலத்தையும் கடைப்பிடிக்கின்றார் !

ஐந்தெழுத்தில் ( பாஸ்கரன் )என்றும் மூன்றெழுத்து அடங்கும் 
லக்ஷ்மி (மூன்றெழுத்து) என்ற பெயரும் இதில் அடங்கும் !

திருமதி ஒரு வெகுமதி  என்று கூறுவது  வழக்கம் 
திருமதியின் பெயரோ லக்ஷ்மி என்றழைப்பது பழக்கம் !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் தவிர்க்க  முடியாது  நட்பும், உறவும்!


 அன்பும், அறனுமுடைத்தாயின்  இல்வாழ்க்கை 
பண்பும்  பயனும்  அது. என்பது  வள்ளுவன் வாக்கு !

  ரா.பார்த்தசாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக