செவ்வாய், 21 மார்ச், 2017

வாசுதேவன் மணிவிழா




Conversation opened. 1 read message.




.                                                

திருமதி விஜயலக்ஷ்மி வாசுதேவன்                                இடம்:                            திரு. வாசுதேவன் வீரராகவன்                                       குருவாயூரப்பன்                                                                  
                                                                                            ஆஸ்திக சமாஜம் 
                                                                                             நங்கநல்லூர் 
                                                                                             சென்னை -600 061                                       
                                                                                 தேதி : 19 அக்டோபர் 2016            
                                  ஷ்ஷடியப்தபூர்த்தி   வாழ்த்து மடல்

 அலமேலுமங்க தாயார்,வெங்கடாசலபதியின் அருளால் ஒரு மேடை 
 இன்று நங்கநல்லூரில் திரு வாசுதேவனின் ஷ்ஷடியப்தபூர்த்தி மேடை
 
.தந்தையும், மகனும் ஒரே நக்ஷ்த்திரம் (ரோகிணி) அமைவது சிறப்புடையதே,
தந்தைபோல் மகனும் சிறப்படைவான் என ஆகமநூல் கூறுகின்றதே !

 பத்மா, வீரராகவன் (லேட்) ஐந்தாம் மகனாய் தோன்றிய வாசுதேவனே
 என்றும் சென்னையில்  வளம்பெற்று வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

அகவை அறுபதும், ஆயிரம் நிலவு காண்பதும் சிறப்புடையந்தன்றோ 
 தவப்புதல்வன், கோகுல் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ


 ஷ்ஷடியப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதும் ,பெறுவதாகும் 
 அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசிர்வாதமே  ஆகும் !

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !



கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !


வேலையும் செய்துகொண்டே  மற்றும் பகுதிநேர நடுவராய் (கிரிக்கெட்டில்) இருந்து நற்பெயர் பெற்றாய்,
ஒரே  மகன் நன்கு படித்து, நல்ல வேலையும் கிடைக்கப் பெற்றான் !

பிறந்த வீட்டின்  குலம்  காக்கவேண்டும் 
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும் !

உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் தவிர்க்க  முடியாது  நட்பும், உறவும்!



  ரா.பார்த்தசாரதி  ( பாச்சு )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக