ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மகனும் தாயும்




                                                         மகனும் தாயும்

பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்

எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய்

தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும் !

உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக