ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

அம்ருதாவின் பூச்சூட்டல்/சீமந்தம்

                                         

                                           அம்ருதாவின் பூச்சூட்டல்/சீமந்தம் 


இறைவனுக்கும்  பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே,
கருவுற்ற  மாதரசிக்கும்  பூச்சூட்டல் உண்டு  பாரினிலே,
பூச்சூட்டல் என்பதே திங்கள் ஐந்தும் , ஏழும்  தொடகத்தினிலே ,
சீர்மிகு சீமந்தமோ திங்கள்   ஆறும், எட்டின்  முடிவினிலே !

பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே 

விவேக்கின் மனைவி அம்ருதாவிற்கு  பூச்சூட்டல்!
விவேக்கின்   அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
மெல்போர்னில் இனிதே விவேக்குடன் வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !

மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
வளைகாப்பும்,  வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகனை  பெற்று தர,
அம்ருதாவை நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் (அம்ருதா) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(அம்ருதாவை) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி, கமலா பார்த்தசாரதி

  


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக