வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்




                                            சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

எழுபது  ஆண்டுகள் சுதந்திர  காற்றை சுவாசித்தோமா 
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து சொல்கின்றோமா 
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா 
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா !

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
அந்தமான்,   மற்ற சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக