வியாழன், 11 பிப்ரவரி, 2016

காதல் அதிசயமா! ரகசியமா !



                                          காதல் ஓர்  அதிசயமா!!  ரகசியமா !!


என்னருமை  காதலியே  உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் 
காதல் சிறகினை விரித்து  உன்னை நாடி நின்றேன் 
உன் அழகும், பேச்சும்  எனக்கு  மூச்சு !
 உன் வனப்பே   காணும்போது  அடங்குதே என் பேச்சு !

கவர்ச்சியினை வெளிப்படுத்தி  மனதை சலனபடுத்துகிறாய் 
என் உள்ளத்தை  கவர்ந்திழுக்கும்  காந்தமாகிறாய் 
உன் ஓரப்பார்வையில்  ஆயிரம்  அர்த்தமுண்டு 
அதிலே  மன்மத லீலைகள்  பிறப்பதுண்டு !

கண்ணும், கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே 
எண்ணும்போது  என் உள்ளம்  என்றும் பந்தாடுதே 
காதல் அழகாய் பூக்கின்றதே, சுமையாய் தாக்குதே,
இரு உள்ளங்கள் சொல்லாமல், கொள்ளாமல் ஏங்குதே !

காதல்  என்றும் ஓர்  அதிசயம்  உலகிற்கு,
காதல்  என்றும் ஓர்  ரகசியம் காதலர்க்கு ,
பதினாறு வயதினில் எல்லோர்க்கும் உண்டாகும் காதல்,
இது கல்தோன்றா, மண்தோன்றிய காலத்தே உண்டான காதல் !


ரா.பார்த்தசாரதி









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக