வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சந்தோஷம் என்றும் நம் பக்கம்

          சந்தோஷம் என்றும் நம் பக்கம்



      சந்தோஷம்  என்றும்  நம்  பக்கம்,
.     சந்தோஷம்    என்றாலே மனிதனுக்கு  பாதி  பலம் ,
       அது  இல்லையெனில்  மனிதனுக்கு ஏது  பலம்,
       சந்தோஷம்  நாம்  வாழ்க்கையில் தேடுவது ,
       எப்பவும்  எல்லோர்  நெஞ்சுக்குள் நினைப்பது 
       போதுமென்ற  மனம் இருந்தால் தானே வருவது ! 


  .    சூரியனைக்  கண்டால்  தாமரை
       சந்தோஷத்துடன்  மலர்ந்துதானே பழக்கம்,
       
      கார்முகில்கள்  திரண்டு  வந்து 
       மழை தந்துதான்  பழக்கம்,
                              
      மழையைக்  கண்டால்  மயிலுக்கு 
       மகிழ்ச்சியுடன்  ஆடித்தான்  பழக்கம்,
   .
  .    காட்டில்  உள்ள  குயிலுக்கோ 
       சந்தோஷத்துடன்  கூவிதான்  பழக்கம்.
       
       கிடைத்ததை  மனதிற்கொண்டு  நடப்பவை 
       எல்லாம்  நன்மைக்கே  என  தெளிந்தால் 
       வாழ்வில்  சந்தோஷம்  என்றும் நம் பக்கம்.!
  .

.       ரா. பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக