வியாழன், 14 ஆகஸ்ட், 2014

புத்தாண்டே வருக





                                    புத்தாண்டே  வருக  2015

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை புதிதாய் உருவமெடுதான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

சுயநலங்கள்,  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல் 
அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே !

நாட்டுக்கு நாடு, சமாதனம்  மட்டும் ,
தானமாய்   கிடைக்காதோ புத்தாண்டே !

ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின் 
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக