ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கீதையின் நாயகனே



                                         கீதையின் நாயகனே



  கண்ணா நீ சிறைச்சாலையில்  பிறந்தாய் 
   தந்தையால்  யமுனையை  கடந்தாய் 
   கோகுலத்தில்    யசோதையிடம் வளர்ந்தாய் 
   பாலகனாய் இருந்து பல லீலைகள்நடத்தினாய் !

  உன்னை நாடி வந்த ஆய்ச்சியர்களை கவர்ந்தாய் 
  உன்னை கொல்ல வந்த அசுரர்களை  கொன்றாய்     
 தீமை செய்த காளிங்கன் மேல் நடனம் புரிந்தாய் 
  வெண்ணை திருடும்  கள்வனாய் திரிந்தாய் !

  இந்திரனின் கர்வத்தை அடக்கி ஆயர் குலத்தினை காத்தாய் !
  அவர்களுக்காக மலையையே குடையாகப்  பிடித்தாய் !
  கிருஷ்ண, பலராமனாக, அக்குரருடன்  சென்று  கம்சனை  வதைத்ததாய் !
  பெற்றவளையும் , வளர்த்தவளையும்  வணங்கி நின்றாய்!

  பண்டவர்களுக்காக  அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாய் சென்றாய் !
  துரியோதனனுக்கும்  மற்றவர்களுக்கும் அறிவுரை  கூறினாய் !
 போரே முடிவானதும் பாண்டவர் பக்கம் துணை இருந்தாய் !
போரில் கீதை எனும்  வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தாய் !

தர்மத்தினால்  பாண்டவர்களை போரில் வெற்றி பெற செய்தாய் !
அதர்மத்தை அழிக்கவே  அவதாரம் எடுத்தாய் என்பதை நீயே அறிவாய்!
ஆக்கலும், அழித்தலும் உன் அவதாரத்தினால்  நடதிடச் செய்தாய் !
ஜடவரதன் அம்பு பட்டு யாரும் அறியாமல் விண்ணுலகம் சென்றாய்.!

ரா.பார்த்தசாரதி
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக