செவ்வாய், 14 ஜனவரி, 2014

பொங்கலின் வண்ணக்கோலங்கள்

                                         பொங்கலின்  வண்ணக்கோலங்கள்

                                புள்ளியிலே  ஆரம்பித்து  புள்ளியிலே        
                                                   முடியும்    புள்ளிக்  கோலங்கள்,
                                
                                கோடுகளை  இணைத்துப்  போடும் கோலங்கள்,
                                புதுமையாக  நாம் காணும்  வடிவங்கள் !
                              
                                கோலங்கள்   பண்டிகைகளுக்காக மாறும் வண்ணங்கள்,
                                அதுவே  பெண்களுக்குரிய  கை  வண்ணங்கள் !

                                இதயத்தையும் , மனதையும் கவர்ந்திடும் கோலங்கள்,
                                 மகாலட்சுமி அழைப்பதர்கான விடியற்காலை கோலங்கள் !

                                 காலங்களும், கோலங்களும் என்றும் மாறும்,
                                 கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும் !

                                 
                                 இல்லத்தில்  கோலம்  போடுவதே மகாலக்ஷ்மியின் தரிசனம்
                                  மனித  வாழ்கையில் சலனம் போக்குவதே  தெய்வதரிசனம் ! 

                                 வெள்ளிகிழமை. விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்,
                                 இறைவன் பெயரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்!

                                 பொங்கலன்று  சென்னையில் பல வண்ண கோலங்கள,
                                  மனிதனின்  மனதில் தோன்றிடுமே  நல்ல  எண்ணங்கள் !

                                 ரா. பார்த்தசாரதி

                                 


                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக