சனி, 18 ஜனவரி, 2014

கண்கண்ட தெய்வம் பாபா

                                                  கண்கண்ட  தெய்வம் பாபா
 
கிழக்கிலே  ராமகிருஷ்ண பரமஹம்சர்  தோன்றினாரே 
தெற்கிலே  ரமணமகரிஷி , ராமலிங்க ரும் தோன்றினரே
மேற்கில்  ஒரு  ஷீரடி  பாபா  தோன்றினாரே 
அவணியிலே  தெய்வ அருள்பெற்றனரே !

ஷீரடிலே  ஓர்   ஷீரடி  பாபா ,
சாந்தமும்,  அன்பின்  உருவமே பாபா,
சாய்பாபாவின்  கருணை  கவலைகள் தீர்க்குமே ,
சமரசமும், தெய்வீகமும்   கொண்ட   ரூபமே !

அவர்  அடிமலரே  நமக்கு  சரணாலையம் 
அவர்   மக்களின்  மனதில்   நெஞ்சில் ஓர்  ஆலயம்,
அவர் கமலபாதம்  பணிந்தாலே பாவங்கள் தீருமே 
அவரை அனுதினம் வழிபட்டாலே நன்மை அடைவோமே !

பாபாவின்  பாதமே  நமக்கு  துணை 
அவர்  நாமம்  சொல்வதே உற்றத்துனை 
அன்பே கடவுள் , அருளே  அவர் வடிவம்.
அவரே  ஞாலத்தின்  கண்கண்ட  தெய்வம்!


ரா. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக