புதன், 22 ஜனவரி, 2014

எம்.ஆர் . ஸ்ரீநாத் திருமண வாழ்த்துமடல்

                                                        திருமண வாழ்த்துமடல்

மணமகன் :  எம்.ஆர் . ஸ்ரீநாத்                                                    இடம் : சென்னை 
மணமகள் :  ரெணிகா                                                                   தேதி  :  23-01-2014

1.  இன்று  ஸ்ரீ   லக்ஷ்மி  ப்ரசன்ன மஹாலில்  ஓர்  கல்யாணமேடை ,
     திருமதி. ரெனிகா ( மோனிக்கா), திரு. ஸ்ரீநாத்தின்(பாலாஜி)கல்யாணமேடை!

2. வாழ்கைத்துணைநலம்   நாடும்  ஸ்ரீநாத்  எனும்  ஆடவனே,
     என்றும்  அமெரிக்காவில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

3. கல்யாணம்  என்றாலே   வைபோகமே ,
     வாரணமாயிரம்  பாடியும்  வாழ்த்துவோமே !

4.  திருமதி  ஓஒரு  வெகுமதி  என்று அழைப்பது  வழக்கம்,
     திருமதியின்  பெயரோ ரெணிகா (அ) மோனிகா என்று அழைப்பது பழக்கம் !

5. மலர்போன்ற  மலர்கின்ற மனம் வேண்டும்  நற்பெண்ணே,
    மண்வாசனை  மாறாத  குணம் வேண்டும் மணப்பெண்ணே !

6. மணந்து  நின்றே புகழ் பரப்பி என்றும் மணமக்கள் 
    மலர்போல  மணம்  வீசி  இல்லறத்தில் வாழ்தல் வேண்டும்!

7.   இல்லறம்தான்  திருமணத்தின்  தொடக்கமாகும்
      இதற்குள்ளே  எல்லாமே  அடக்கமாகும் !

8.  மனைவி என்றாலே  மாண்பு  சேர்பவளே,
      வீட்டை  வெள்ளிச்சமாக்கும் விளக்காய்  இருப்பவளே !

9. கணவன் என்றாலே  கண் போன்றவனாகும்,
    அவன் வழியே  உலகை காண்பவள் மனைவியாகும்!

10. பிறந்த வீட்டின்  குலம்  காக்கவேண்டும்,
      புகுந்த  வீட்டின்  நலம்  காக்க வேண்டும் !

11. காலங்களும் , காட்சிகளும்  என்றும்  மாறும்,
      கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!

12. மணமக்கள்  ஏற்பதோ  நல்வாழ்த்தும், நல்லாசியே !
       அகிலத்தில் சிறந்தது  பெற்றோரின்  ஆசியே !

13. வாழ்க்கைத்துணை  ஒன்றே  மனைவி  தன்னை,
      வள்ளுவரும்  சிறப்பாக சொல்லி வைத்தாரே !

14. மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்,
       வேற்றுமையில்  ஒற்றுமை  கண்டு  விருந்துண்போம் !

                                                                                ரா. பார்த்தசாரதி - 9884116452
                                                               
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக