சனி, 28 செப்டம்பர், 2024

Worlad Heart Day 0n 29-09-2024







                                                  உலக  இதய தினம் 
                                                       29-09-2024

      இதயம் ஒரு கோவில  என சொல்வதுண்டு!
      அதனை தூய்மையாக பாதுகாக்கவும் கடமையுண்டு!
       அதீத   எண்ணம்,உணர்ச்ச்சியால் பழுதுஅடைவதுண்டு! 
      இதனால் மனித இதயம், பலமிழந்து மரணமடைவதுண்டு !

      இறைவா , மனிதனுக்கு, கையளவு இதயம் வைத்தாய் !
      கடல் அளவு மனிதனுக்குள் ஏன் ஆசை வைத்தாய் !
      இதயத்தை உடல் எனும் கூண்டுக்குள் அடைத்து வைத்தாய் !
      இவ்வுயிரண்டையும் தந்தவளை அம்மா என உணரவைத்தாய்!

    இதயம் ஒரு சிறை,குற்றம் செய்தவர்கள் மாட்டுவதில்லை!.
    பாசம் வைத்தவர்கள்  என்றும் துன்பமடையாமலிருப்பதில்லை   
       இருவரின் துடிப்பினிலே விளைவதும் மழலையடா !
       இருவர் இதயங்களின் இணைப்பிலே மலர்வதும் காதலடா !

       உடலுக்குள் இருக்கும் இதயம், உண்ர்ச்சி பெட்டகமே  !
       அதிலே அடங்கிடும் மனிதனின் உயிரோட்டமே  !
       இவ்வோட்டமே  நிற்காமல் ஓடினால் மனிதனின் நடமாட்டமே!
       இதனை பொக்கிஷமாய் காப்பதே நம் கடமையாகுமே !

       உடல் முழுதும் குருதினை பரப்புவதும்  இதயமடா !
       ஆயுள் முடியும் நமது உடலில்  ஓடும் கடிகாரமடா !
        நல்ல உடற்பயிற்சி செய்வதே இதயத்திற்கு வலிமையடா!
        தியானத்தாலும் , மௌனத்தாலும் காப்பது நம்கடமையடா!

         ரா.பார்த்தசாரதி.    D- 103
         8148111951. 
           
         


         

திங்கள், 26 ஆகஸ்ட், 2024








                        


                                                                    கிருஷ்ண ஜெயந்தி 

               ரோகிணி நட்சத்திரத்தில் தேவகிக்கு  மகனாய் பிறந்தவனே !

               புல்லாங்குழல் இசைத்து எல்லோர் மனதையும் கவர்ந்தவனே! 

               கோகுலத்தில்  கோபியர்களை கவர்ந்த கோபாலனே! 

               வெண்ணையை திருடி உண்டு நவநீதன் எனும் பெயர் பெற்றவனே! 

               பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ராஸலீலை புரிந்தவனே! 

               மலையை ஒரு விரலில் குடை பிடித்து கிரிதரனாய் நின்றவனே! 

               கம்சனையும், பல அரக்கர்களையும் சம்ஹாரம் செய்தவனே! 

               அர்ச்சுனனுக்கு பாரதப் போரில் சாரதியாய் இருந்தவனே !

               கீதை எனும் வேதத்தை அர்ச்சுனனுக்கு உபதேசித்தவனே !

                கண்ணா, கண்ணா , என்றாலே எல்லோர்க்கும் அருள்பவனே !


               ரா.பார்த்தசாரதி - D 103

                8148111951

               

                 

வெள்ளி, 14 ஜூன், 2024

Vashisd and Kaaviya Vazuthu Madal

 


                                   திருமண வாழ்த்து மடல் 

1.   ஆற்காட்  ரோட்டில் உள்ள பத்மாராம்  கல்யாணமண்டபத்தில்  ஓர் மேடை ,  
       வஷிஷ்ட்க்கும்,   காவ்வியாவிற்கும்   எழுதிவைத்த  கல்யாண மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  திருமண விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  ஆசியே 
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

4. காதலை முடித்து, திருமணத்தை எதிர்நோக்கும் வஷிஷ்ட்  எனும் ஆடவனே     
     என்றும்  சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே!

5. காதல் என்பது எது வரை? திருமணத்தில் முடியும் வரை,
    திருமணம் என்பது எது வரை? இருமனம் ஓன்றாகி இல்வாழ்கையில்       
     இணைந்திடும்   வரை! 

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ  காவ்வியா என்று  அழைப்பது பழக்கம்   !

7.  காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்

8.   பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

9.  .கணவன் என்றாலே,  கண்ணைப் போன்றவனாகும்,
     அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
10.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை!

11. நான்கெழுத்திற்கு  ஓர்  பெருமையுண்டு 
      நான்கும் அறிந்தவன் என சொல்வதுண்டு 

12   காவ்வியா {வை} கைப்பிடிக்கும்  வஷிஷ்ட நான்கெழுத்து 
          வஷிஷ்ட {ஐ } கைப்பிடிக்கும் காவ்வியா {விற்கு}நான்கெழுத்து 

13.    நான்கெழுத்து கொண்டு  நான்கும் அறிந்தவனே !
          நான்கு குணம் அறிந்த சிறந்த நற்ப்பெண்ணே !

14..   வேற்றுமையில்  ஒற்றுமை கண்டு,  விருந்துண்போம் 
         மணமக்கள் வாழ்வில் வளம்பெற  வாழ்த்துவோம்!

15.  அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
        பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 
                                                                                                             ரா.பார்த்தசாரதி 
                                                                                                              8148111951

    

வியாழன், 30 மே, 2024

Periyaswamy thriumana vazhthumadal

 



மணமகன்: எம் பெரியசாமி                                                    இடம் : மேலரதவீதி                                மணமகள் : எம்.பேச்சியம்மாள்                                                பாளையங் கோட்டை 
 
 அருள்மிகு  சுப்ரமணிய சுவாமி சன்னதியில் ஓர திருமண மேடை  
  இன்னாருக்கு   இன்னார், என்று  எழுதிவைத்த திருமண  மேடை,

2. இருவீட்டாரும்  இணைந்தே  நடத்திடும்  விழா ,
    உற்றாரும், உறவினர்களும், வாழ்த்திடும்  விழா !

3. திருமணம் என்றாலே உற்றார், உறவினர்  
    அகிலத்தில் சிறந்தது தாய்,தந்தையர்  ஆசியே !

6.  திருமதி என்பது  ஒரு வெகுமதி என்று சொல்வது வழக்கம் 
     திருமதியின் பெயரோ பேச்சியம்மாள்  என்று அழைப்பது  பழக்கம்   !

5.   காலங்களும், கோலங்களும், என்றும்  மாறும் 
     கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும்!

6. .மலர்போன்று  மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!

7.   பிறந்த வீட்டின்  குலம் காக்க வேண்டும் ,
     புகுந்த வீட்டின்  நலம் காக்க  வேண்டும் !

8,  கணவன் என்றாலே,  கண் + அவன்    என்பதாகும் 
    அவன் வழியே  உலகை காண்பவள்  மனைவியாகும் !
  
09.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை,
      ஆயிரம்  உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை

10,. அன்பும், அறனும்  உடைத்தாயின், இல்வாழ்க்கை  
      பண்பும், பயனும்  அது.   என்பது  வள்ளுவர் வாக்கு. 

      ரா.பார்த்தசாரதி .  8148111951

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

kankanda deivam

 


         கண்கண்ட  தெய்வம் 

தாயே  விளை  நிலமாம்,  தந்தையே  வித்தாம்,
குலம் தழைக்க வந்ததோ ஓர்  சொத்தாம்.
கருவறையில்  என்னை பாதுகாத்தாய் ,
 உனக்கென்று  உண்ணாது ,  எனக்காக உண்டாய் 

நான்  வயீ ற்றில் உதைத்த உதை  வலியானதே
நான்  பிறக்கும்போது  அதுவே உனக்கு மகிழ்வானதே.
பிறந்த மேனியாய்   வெளிஉலகிற்கு  வந்தேன்,
 தாய் தந்தைக்கு  மட்டற்ற மகிழிச்சி  தந்தேன்.

என்னக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் ,
எனக்காக  குருதியீனைப் பாலாக   பொழிந்தாய் 
உனது  அணைப்பே   எனக்கு  சுகம், ,
உனது  மடியே  எனக்கு  தொட்டில்..

தோளையே தூளியாக்கி  என்னை சுமந்தாய் ,
என்னை வயிற்றில்   சுமந்ததைவிடவா ?
உன்னக்கோ  ஆயிரம்   பிரச்சனை இருப்பு,
என்னை கட்டி அணைப்பதில்தான்  ஆனந்த களிப்பு.

 பசி, தூக்கத்தை அழுது வெளிபடுத்துகிறேன் ,
என் கள்ளமில்லா சிரிப்பாலே உங்கள் கவலைகளை போக்குகின்றேன்.

நான் படிச்ச பாடமெல்லாம்  மறந்துபோச்சே
நீ  காட்டிய பாசமே  நிலைத்துப்போச்சே
என்   வளமே உன்  சிறப்பு
என்  நினைவே பாசத்தின் பிணைப்பு  .

மண்ணுக்கு மரம் பாரமா, மரத்திற்கு கிளை பாரமா ,
பெற்றுஎடுத்த  குழந்தை தாய்க்குதான்  என்றும் பாரமா 
அன்பும்  பாசமும்  அளிப்பவள்  அன்னைதானே 
ஆக்கமும்  அறிவும் அளிப்பவர்  தந்தைதானே 

அன்னையே  என்றும் முதல் தெய்வம் 
உயிரும்,  உருவமும்  அளித்த கண்கண்ட  தெய்வம்.

   ரா. பார்த்தசாரதி.

புதன், 7 பிப்ரவரி, 2024

 


                                   சாய்ஸ்ரீ , வினோத்    

            கவிப்பரணியேறி  கலிங்கத்துப் பாடுகின்றேன் ,
            கேளுங்கள், கேளுங்கள் !
            ஆடிடும் அலையினில் ஏறிட்டும்  நுரையென
            பாடிடும்  பாட்டினில்  பண் ( இசை )  என, 

            எங்கள் தாய்மொழி தமிழில்
            மூன்றெழுத்திற்கு  என்றும் ஓர்  சிறப்புண்டு,
            மூத்தமிழ்  என்ற பெயருண்டு

            தாய் தன் பிள்ளைகளிடம்  காட்டும் பரிவே    அன்பு 
            அன்பிற்கும் மூன்றெழுதுதான்
            தந்தை தன்  மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு 
            அறிவிற்கும்   மூன்றெழுதுதான்   
            குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி 
            கல்விக்கும் மூன்றெழுதுதான்
            பக்தன் இறைவனிடம் கொள்வதோ  பக்தி
            பக்திக்கும்  மூன்றெழுதுதான்  
            கவிஞ்சன்   கவிதையை பாங்குற உரைப்பதே யுக்தி 
             யுக்திக்கும் மூன்றெழுதுதான்  
             குழந்தையின்  சிரிப்பே  மழலை 
             பூக்களின்   சிரிப்பே  மணம் 
             நாடு நலம் பெற வேண்டின்
             நாட வேண்டும் நல்லவர்  நட்பு 
             படை வீரர்கள்  திறமையே  வீரம் 
             பெண்டிர்க்கு  அணிகலனே   கற்பு 
             மனிதன் நல்லதை செய்ய தேவை  நல்ல மனம் 
             கைம்மாறு  எதிர்பாராமல் செய்வதோ வள்ளல் குணம   

             எங்கள் அன்பு செல்ல பெண் சாய்ஸ்ரீ  மூன்று எழுத்து 
             எங்கள் அன்பு மருமகன் வினோத்  மூன்று எழுத்து 
              அவர்கள் எல்லா செயல்களிலும்  வெற்றி  எனும் 
             மூன்றுஎழுத்தினை அடைய வேண்டும் .

             ரா.பார்த்தசாரதி - 8148111951
                 

                                 
             

சனி, 27 ஜனவரி, 2024

பெண்ணே நீதான்




                        

                      


                       பெண்ணே  நீதான் 

                       ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

                       பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

                       என்னை  வயிற்றிலும், தோளிலும் , மடியிலும்  சுமந்தவள்  நீதான் 

                       என் தகப்பனை அடையாளம் காட்டியவள் நீதான் 

                       என் தாய் மொழியை  கற்று கொடுத்தவள் நீதான் 

                       அன்பு, பாசம்,  நேசம் என்னவென்று கற்றுக்கொடுத்தாய  நீதான் 

                       என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

                       திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

                       நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

                       நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

                       மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

                       குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

                       குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

                       பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .