அழகு என்பது எது ! Azhagu enpathu ethua !
Kavithai Pookal
வியாழன், 26 ஜூன், 2025
வியாழன், 20 பிப்ரவரி, 2025
Mudras for Morning, Evening and Night.
காலையிலும் , மாலையிலும் செய்யும் முத்திரைகள்
(Pranaa Mudra) (Pranaa Mudra)
( Varuna Mudra) ( Vaayu Mudra)
(Sumana Mudra) ( Sakthi Mudra)
( Viyaana Mudra) ( Abaana Vaayu Mudra)
(Ratha Saman Mudra) (Theyaana Mudra)
( Abaana Mudra) ( Hackini Mudra)
(Vaayu Mudra) (Booshan Mudra)
2. கருட முத்ரா (Garuda Mudra)
3 ப்ரித்வி முத்ரா ( Prithvi Mudra)
5 அஞ்சலி முத்ரா ( Anjali Mudra)
6. சூனிய முத்ரா (Sooniya Mudra)
7. சின் முத்ரா ( Chin Mudra)
செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
Vaan Pugzh konda Thiruvalluvar.
வான் புகழ் கொண்ட வள்ளுவன்
வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்த வான் புகழ் கொண்டதே
உலகின் பொது மறை என கூறுவதும் பொருத்தமானதே
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் கொண்டதே
தினம் ஒரு குறள் படித்தாலே வாழ்க்கை முன்னேறியதே
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சிறப்படைந்ததே
நாட்டிற்கும், மக்களுக்கும் சுலபமாய் படிக்கமுடிந்ததே
எல்லா நூல்களிலும் தன்னிகரற்று இன்றும் விலங்குதே
குறளினை படித்து, பரவும் வகை செய்வதே
ஈரடி பாக்களால் பூமியையும், உலகையும் திருத்தினார்
அவர் பல மைல் கடந்து புகழோடு சிறப்புற்றார் !
குறளினை படித்து, பரவும் வகை செய்வதே
நாம் வள்ளுவனுக்கு செய்யும் தொண்டானதே !
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் !
ரா,பார்த்தசாரதி
வான் புகழ் கொண்ட வள்ளுவன்
வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு
உலகின் பொது மறை என கூறுவதும் பொருத்தமானதே
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் கொண்டதே
தினம் ஒரு குறள் படித்தாலே வாழ்க்கை முன்னேறியதே
பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சிறப்படைந்ததே
நாட்டிற்கும், மக்களுக்கும் சுலபமாய் படிக்கமுடிந்ததே
எல்லா நூல்களிலும் தன்னிகரற்று இன்றும் விலங்குதே
ஈரடி பாக்களால் பூமியையும், உலகையும் திருத்தினார்
அவர் பல மைல் கடந்து புகழோடு சிறப்புற்றார் !
நாம் வள்ளுவனுக்கு செய்யும் தொண்டே !
குறட்பாக்கள் கொடுத்து உலகை வாழவைத்த
தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சமர்ப்பணம் !
சனி, 25 ஜனவரி, 2025
Kudiyarasu dinam 2025
, ,
குடியரசு தினம் 26 2025.
வைக்கின்றோம் !இன்று நாட்டின் நிலைமை என்ன ?
பண வீக்கம், இந்திய நாட்டு பணம் அந்நிய செலவாணியில் மதிப்பிழுப்பு ,நடுத்தெரு மக்களும், ஏழைமக்களும் வாழ்வில் இறக்கம், நாளுக்குநாள் உயர்ந்து வரும் விலைவாசி வரிச்சுமை இதுதான் இன்றைய நிலைமை.
பெற்று வருகிறது. மக்களே நாம் சற்றே சிந்தித்து பார்ப்போம்
குடியுரிமை பெற்று தந்த வீரத் தலைவர்களின்
பாதம் பணிவோம்!
மண்ணில் சாய்த்து மண் வளம் சிறக்கசட்டம் வலுப்பெறட்டும்!
மக்கள் நலன் காக்கும் நிர்வாகம் அமைய ஒன்றுபட்டு
நரம்புகள் புடைத்து வார்த்தைகள் தடித்து
இன ஒற்றுமையை சீர்குலைக்கும் மத தீவிரவாதத்தை
வேரோடு சாய்த்து இந்திய பேரரசின் மகத்துவம் போற்றட்டும்!
அகிம்சை வென்றது குடியுரிமை கிடைத்தது தனி சட்டம் உருவானது. ஒற்றுமை கனிந்தது காலத்தை வென்று
தலைமுறை காக்கும்! பண்பாடு சிறக்கட்டும்!
ஒற்றுமை நிலைக்கட்டும் மக்கள் நலன் சிறக்கட்டும்
தேசிய கொடி பறக்கட்டும் தேச பக்தி ஒளிரட்டும்
தேசியம் ஓங்கட்டும்!
படுங்கள். மக்கள் நலன் போற்றும் நல்லவர்களுக்கு வாக்களித்து, பணத்திற்காக உங்கள் ஓட்டை பிச்சையிடாதீர்கள் !குடியரசு தின நன்நாளில் நாம் சபதம் ஏற்போம்! நன்றி ! வணக்கம் !
ரா.பார்த்தசாரதி .
வெள்ளி, 10 ஜனவரி, 2025
இதயமே !! என்றும் மறவாதே
வியாழன், 26 டிசம்பர், 2024
உலக யோகா தினம் ஜூன் 21ம் தேதி
ஆய கலைகள் அறுபது நான்கு கலையே
யோகாவும், முத்திரைகளும் இதனில் அடங்கும் கலையே
யோகிகளும், சித்தர்களும், தொன்றுதொட்டு வளர்த்த கலையே
நமது நாட்டினில் தோன்றிய பழம் பெரும் கலையே !
உடலும்,மனதும் ஒன்று கூடி, உணர்ச்சிகளை அடக்கும்
மூச்சு பயிற்சியாளும் , முத்திரைகளாலும் பலவித நோய்கள் அடங்கும்
யோகப் பயிற்சியும் , நடை பயிற்சியும் அனுதினம் செய்யுங்கள்,
அது இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !
உடல் வளர்த்தோர் , உயிர் வளர்த்தோர் என்று சொவதுண்டு
சில யோகாசனங்களுக்கு மிகுந்த சிறப்புண்டு
சிறுவர் முதல், முதியோர்கள் வரை யோகா பழகலாம்
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !
யோகா கலை நமது நாட்டில் தோன்றியதே
பழம் பெரும் கலையானாலும் ,எல்லோர்க்கும் உகந்ததே
சித்தர்களும், யோகிகளும், வளர்த்த கலையாகும்
இதன் பெருமை அறியாத மனித வாழ்வே வீணாகும்
நோய்யற்ற வா ழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களும்,முத்திரைகளும், செய்து உடல் நலனை பேணுங்கள்
யோகாசனம், நடைப்பயிற்சியின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள்
உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !
ரா.பார்த்தசாரதி
செவ்வாய், 19 நவம்பர், 2024
Ninaikaa therintha Manam