ஞாயிறு, 4 நவம்பர், 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள்





  பிறந்தநாள் வாழ்த்துக்கள்
   

நீ நீடு வாழ வேண்டும் 
நீ நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் 
நீ வளர்ந்து வாழ வேண்டும்
நீண்ட நீண்ட காலம் 
நீ நீடு வாழ வேண்டும
அன்பு வேண்டும் அறிவு வேண்டும் 
பண்பு வேண்டும் பரிவு வேண்டும்
பொறுமையும், நிதானத்தையும் கைக்கொள்ளவேண்டும் 
நன்மை செய்து  புண்ணியத்தை என்றும் சேர்க்கவேண்டும் 
எட்டு திக்கும் புகழ வேண்டும் 
எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை 
நிலவுத் தாளில் எழுத வேண்டும
உறவையும்,  நட்பையும் பேண வேண்டும் 
பாசமும், நேசமும் வளர்த்திட வேண்டும் 
வாழ்த்த வயதில்லை ஆனாலும் 
கரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன் 
பிறந்த நாள் வாழ்த்துகள் 
பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ரா.பார்த்தசாரதி 





























































































































































































































































































































































































செவ்வாய், 2 அக்டோபர், 2018

Gandhi Kallakivittaar






                           காந்தி   கல்லாகி விட்டார் 


உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன் 
நேர்மை எங்கே என்று எல்லோரிடந்திலும் கேட்பேன் 
எளிமை எங்கே என தேடி அலைந்து கொண்டிருப்பேன் 
தூய்மை  எங்கே என மனம் குமுறி துடித்துபோவேன் !

சத்யதிற்கே ஒரு சத்யசோதனையா என எண்ணிடுவேன் 
அகிம்சை  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன் 
மனித நேயத்தை இந்ந்நாட்டில் எங்கே என்று கேட்பேன் 
நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன் !

அன்று வெள்ளையரை வெளியேற அமைதி போரை துவக்கினேன் 
இன்று மக்கள் தண்ணீருக்காக போராட்டம்  நடக்கின்றதே
எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே 
நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே !

நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின்விடுதலைக்காகவே 
இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே 
என்னை தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே 
என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே!

என் மதிப்பு, என் தலை, ரூபாய் நோட்டின் முகப்பிலே ,
என் கொள்கைகள் எல்லாம் வீசபடுகின்றதே தெருவிலே,
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றேனே 
இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே !


ரா. பார்த்தசாரதி 

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

Yoga and its importance





                  
ந்தியாவில் பிறந்து இன்று உலகெங்கும் கோலோச்சிக்கொண்டிருக்கிறது, யோகா! சர்வதேச அளவில் யோகா, தியானம் போன்றவை கவனம் பெற்றதற்கு மகரிஷி மகேஷ் யோகி, பி.கே.எஸ். அய்யங்கார் போன்ற யோக ஆசான்கள் முக்கியக் காரணம். இவர்கள் தொடங்கி, உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகாவைக் கொண்டு சேர்த்தவர்கள் ஆன்மிகத்தின் வழி ஆரோக்கியம் பேசியவர்கள்தான்.
தமிழகத்தின் தென் எல்லையிலிருந்து ஹரித்வாருக்குச் சென்ற பத்தமடை சிவானந்த சுவாமிகள்தான், அதுவரை ஞான வழித்தேடலில் சென்றோருக்கு மட்டுமே இருந்த யோகக் கலையை, சாமானியனின் நலத்துக்காக வடிவமைத்தும் பரிந்துரைத்தும் செய்த ஆன்மிகக் குருக்களுள் முக்கியமானவர் எனலாம்.

எமனை விரட்டும் ஓகம்

யோகா என்றவுடன் பதஞ்சலி முனிவரின் பங்களிப்பு இன்று அதிகம் பேசப்படுகிறது. அவர் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த மூத்த 18 சித்தர்களுள் ஒருவரான திருமூலரும் ‘ஓகக் கலை’யை மிக நுட்பமாகப் பேசியிருக்கிறார்.
‘காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்குக் கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என பூரகம் - இரேசகம்- கும்பகத்தைக் கணக்கிட்டுப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்தால், எமனை உதைத்து விரட்டலாம் எனப் பொருள் கொண்ட திருமூலரின் ஓகப் புரிதல்கள், சித்த மருத்துவத் தத்துவங்களோடு நெடுங்காலம் நம்மோடு இருந்து வருபவை. ஓகம், காயகல்பம் எனும் சித்த மருத்துவத் துறையின் மிக முக்கியமான பயிற்சியும்கூட.

கட்டுப்படும் நீரிழிவு

யோகாவைக் கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இயலுமா என்றால், ‘ஆம்’ என்கின்றன பல ஆய்வு முடிவுகள். எந்த அளவில் உள்ள நீரிழிவு நோயாளிக்கு? நீரிழிவு நோயின் மற்ற சிக்கல்களுக்கு எப்படிப் பயனளிக்கும்? நீரிழிவு வராது தடுக்க உதவுமா? நீரிழிவு நோயரின் மன உளைச்சலைத் தவிர்க்குமா? எல்லா நீரிழிவு நோயரையும் வருத்தும் சோர்வை நீக்குமா எனப் பல தளங்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.
‘ஜர்னல் ஆஃப் டயாபட்டீஸ் ரிசர்ச்’ எனும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ இதழில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்த கட்டுரை சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளில் மிக முக்கியமானது (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4691612/). இக்கட்டுரை உலகெங்கும் யோகாவில் நடைபெற்ற ஆய்வுகள் பலவற்றையும் தொகுத்து, அந்த ஆய்வுக் கட்டுரைகளின் போக்கு, நம்பகத்தன்மை, அவை எல்லாவற்றின் ஒருமித்த முடிவுகள் என்ன என அலசி ஆய்ந்து சொல்கிறது.
வர்ஜீனியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் தேசிய மாற்று மருத்துவமுறை கவுன்சிலும் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவாக, ‘யோகா பண்ணுங்கப்பா… சர்க்கரையும் கட்டுப்படும். சர்க்கரையால் பின்னாளில் சிறுநீரக, இதய சங்கடங்கள் வருவதும் கணிசமாய்த் தடுக்கப்படும்’ என அறிவித்துள்ளது. 2,170 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளை எல்லாம் அலசி ஆராய்ந்துதான், யோகாவின் பயன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் பார்த்துப் பயிற்சி

யோகா, கணையத்தில் தொய்வடைந்த பீட்டா செல்களைத் தூண்டுவதையும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸைச் சீராக்குவதையும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளன. கூடவே மிக முக்கியமாக டீலாமரேஸ் (telomerase) என்ஸைமில் ஆட்சி செலுத்துவது மூலமாக டீலாமர் (telomere) நீளத்தை அதிகரித்து, வயோதிக மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும் உறுதிப்படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள்.
சரி எந்த யோகாவைச் செய்வது? மூச்சுப் பயிற்சி எப்போது? ஆசனம் எப்போது? இப்படிப் பல கேள்விகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எழலாம். அதற்கு விடைதரும் விதமாக, பெங்களூரூவில் உள்ள யோகா பல்கலைக்கழகமும், மத்திய ஆயுஷ் துறையும் இணைந்து தினசரி செய்ய வேண்டும் என்று, கீழ்க்கண்டவாறு ஒரு மணி நேரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளன (பார்க்க பெட்டிச் செய்தி).
இந்தப் பட்டியல் நோயரின் உடல்வாகு, நோய் வகையைப் பொறுத்து தேர்ந்த சித்த, யோக மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றியமைத்துச் செய்யலாம். வாட்ஸ் ஆப், கூகுள் குருக்களிடம் பயில்வது நல்லதல்ல.

மரபு கொடுத்த பொக்கிஷம்

நீரிழிவு நோய் கட்டுக்குள் வர மனத்தை ஆற்றுப்படுவதும் பரப்பரப்பில்லாத வாழ்க்கை முறையும் மிக மிக அவசியம். இவ்விரண்டுக்கும் மனதையும் உடலையும் ஒருமிக்க வைக்கும் பயிற்சியான யோகா மிக முக்கியமானது.
மூளையின் சிம்பதடிக், பாராசிம்பதடிக் நரம்பு மண்டலத்தில் யோகாவும் மூச்சுப் பயிற்சியும் நடத்தும் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து, மூளை ஆசுவாசப்படுவதை அதன்மூலம் மன அழுத்த ஹார்மோன்கள் சீர்படுவதையெல்லாம் ஆராய்ந்து அறிந்து சொல்லிவிட்டனர்.
முறையான உணவுடனும் சரியான மருத்துவத்துடனும் எடுக்கப்படும் யோகா பயிற்சியானது நீரிழிவை முழுமையாகக் கட்டுப்படுத்த, நீரிழிவால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அச்சுறுத்தும் பின்விளைவுகளைத் தடுக்க, நம் மரபு கொடுத்த பொக்கிஷம்!
(தொடரும்)
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018






                                சுதந்திரத்திற்கு சுதந்திரம் இல்லை


எழுபத்திரண்டு  ஆண்டுகள் சுதந்திர  காற்றை சுவாசித்தோமா 
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து செயல்படுகின்றோமா 
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா 
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா !

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில், அநீதி எனும் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
தேசத்திலும், அந்தமான், சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கலைஞ்சர் கருணாநிதி



                                       

                                                கலைஞ்சர்  கருணாநிதி


 உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே என்று அழைக்கும் தலைவா
 இனி.  அந்த காந்த குரல் கடற்கரை காற்றில்  கலந்து விட்டதா
 உலக தமிழரின் உயிர் மூச்சே,  சுண்டி இழுத்தது உன் பேச்சே
 ஒன்றா, இரண்டா உன் சாதனை, ஏட்டில் அடங்கா உன் போதனை !

 உதயசூரியன் மறைந்து விட்டது, இதய காவியம் இறந்துவிட்டது \
 உன்  கவிதையும்,வசனமும் மனத்தினில் நின்று நிழலாடுது 
 உன் குறளோவியமோ வள்ளுவனேயே  நினைக்ச்  செய்கின்றது  
வள்ளுவர்கோட்ட குறள்  ஓவியமே, நீ என்றும் நிலைத்த காவியமே!

 உன் பேனா குனித்தாலும் உன் எழுத்துக்கள் நிமிர்ந்தே நிற்கின்றது 
 தமிழே  உன்னால்  செம்மொழியாய் சிறப்புடன் உலகில் திகழ்கின்றது 
 தமிழின் பெருமையை உலக தமிழ் மாநாட்டால்  சிறப்புற செய்தாய் 
 மெரினாவில் அண்ணாவின் பக்கத்திலேயே  இடம் பிடித்தாய் !  

 கலைஞ்சன்  இருக்கும்போது யாரும்  அவர் செய்ததை  புகழ்வதில்லை  
 அவர் இறக்கும்போது யாரும் அவரை புகழாமல்  இருந்ததில்லை  
 உன் போல் எந்த தலைவனுக்கும், உலகமே  அழுததில்லை 
 உயிர் பிச்சை கேட்டு இறைவனை என்றும் தொழுததில்லை

உன்னைப்போல், சொல்வல்லன் சோர்வு அடைவதில்லை 
உன் சொல்லாலே எதிரியை வீழ்த்த என்றும் தயங்குவதில்லை 
தடைக்கற்கள் உண்டெனினும் தடத்தோள்கள் உண்டு என்றவரே 
எதிர்த்து நின்றரோர்  தமையெல்லாம் எளிதாக வென்றவரே !

முத்துவேலர்,அஞ்சுகம் பெற்று எடுத்த முத்தமிழ் காவலரே 
அரசியலிலும் சாதனை படைத்து, இன்று சரித்திரமானாய் 
உன் திறமையால், உன்னத தலைவனாய் உருவெடுத்தாய் 
உன் இடம் வெற்றிடமே, உன்னை என்றும் மறவாது தமிழினமே !


ரா.பார்த்தசாரதி