வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

இஷானின் ஆயுஷ் ஹோம வாழ்த்து மடல்



                              இஷானின் ஆயுஷ் ஹோம வாழ்த்து மடல் 

இடம் : ராஜா அண்ணாமலைபுரம்                                    தேதி:  23 -08-2016

 சென்னை  உட்ஸவ்  ஹாலில் குழந்தையின்  ஓராண்டு  நிறைவு விழா
ஸ்ரீநாத், மோனிக்காவின்  மூத்த மகன் இஷானின் ஆயுஷ் ஹோம விழா !

தாயே விளை  நிலமாம் , தந்தையே  வித்தாம்
மாடபூஷி  குலம் தழைக்க வந்ததோர் சொத்தாம்!

முதல் ராசி, முதல் நட்சத்திரத்தில்  இஷானுக்கு பிறந்தநாளாம்,
கொள்ளு தாத்தா பெயரை (கோதண்டராமன் ) பெற்ற பேரனாம் !


எல்லா  குழந்தைகளும் உலகில் பிறக்கையில் நல்லவர்களே ,
நல்லவராவதும், தீயவராவதும்,  தாய்,தந்தையின்  வளர்ப்பினிலே !

ஆஸ்திக்கு ஒரு மகன், ஆசைக்கு ஒரு மகள் என்பது அந்தக்காலம்,
ஆண்  மகன், பெண் மகள் இரண்டுமே சமம் என்பது  இக்காலம் !


மூன்று எழுத்திற்கு என்றும் ஓர்  சிறப்புண்டு
முத்தமிழ்  என்ற பெயருண்டு

ஸ்ரீநாத், மோனிகா,  இஷான் மூவருக்கும் மூன்று  எழுத்து
தந்தை, தாய் , மகன்   மூவருக்கும்   மூன்று எழுத்து !

விழா என்றாலே உற்றார், உறவினர் வாழ்த்துக்கள்  நிறைந்ததே
அகிலத்தில் சிறந்தது, தாய் தந்தையர்  வாழ்த்தே !

ஸ்ரீநாத், மோனிகா மற்றும் இஷானையும் வளம் பெற வாழ்த்துவோம்
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, விருந்துண்டு மகிழ்ந்திடுவோம் !


ரா.பார்த்தசாரதி

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்




                                            சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்

எழுபது  ஆண்டுகள் சுதந்திர  காற்றை சுவாசித்தோமா 
இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து சொல்கின்றோமா 
எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா 
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா !

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
அந்தமான்,   மற்ற சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 





 

ஞாயிறு, 31 ஜூலை, 2016

வெள்ளைப் பனி மலை

                                                           


                                                        வெள்ளைப்  பனி மலை  


                 பனிபடர்ந்த மலையின் மேலே
                  அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே ,

                 பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட,
                 நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட !

                  பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி
                  அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி !

                இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே 
                மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே!

                மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே
                 வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே !

                 ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே
                  அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே !
           
                 இயற்க்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமே
                 எனது உனது என்பதெல்லாம்  இடையில் மாறும்  எண்ணமே !


                 ரா.பார்த்தசாரதி

               

சனி, 2 ஜூலை, 2016

தொலைக்கப்பட்ட இன்பமும் உறவும்

ஆயிரம்  என்ன/ன்/அந்த//கல் /உதயம்  நம                                       



/ எங்கும் இன்பம் பொங்கட்டும்!

அலைபாயும் எண்ணங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
வடிகாலாய் வாய்த்தது தான்
திண்ணைப் பேச்சென்பதை
என்றோ மறந்தோம்!

உழைத்துக் களைத்த வேளைகளில்
உறவுகள் சூழ்ந்திட
ஒன்றுகூடி உணர்வுகளை பகிர்ந்த
பொழுதுகளை எல்லாம்
தொலைக்காட்சி, கணினிக்கு பின்
தொலைத்தோம்!

ஒரு நொடி துக்கம்
மறுநொடி சிரிப்பு
வரும் நொடி எதிர்பார்ப்பு...
கைபேசியும், வலைதளமும்
நம்மைக் கடத்திப் போவதால்
எந்த நிகழ்வையும்
மனதில் இருத்திப் பார்க்கும்
தகைமையை இழந்தோம்!

இன்றைய நாகரிகத்தின் பொருள்
ஆடம்பரம்
எழுதாச் சட்டமாகி
நேர்மையையும், உழைப்பின்
மேன்மையையும்
காலாவதியாக்கி
கசங்காமல் காசு பணம் சேர்ப்பதில்
முனைப்பாய் இருக்கிறோம்!

இருப்பதை வைத்து
ஆனந்தம் காணும்
வாழ்வின் நெறி மறந்து
பேராசை நெருப்பில்
போதுமென்ற குணத்தைப் போட்டு
பொசுக்கி குளிர் காய்கிறோம்...

நேசத்தை வெளிப்படுத்த வழியற்ற
அவசர உலகில்
சுகமென்பது ஒருபோதும்
வரமாய் வாய்ப்பதில்லை...

மனிதத்தை இழந்து தொடரும்
நம் பயணத்தில்
வாழ்க்கை வசப்படுவதில்லை
பகிர்வும், பாசமும், அரவணைப்பும்
பண்பாட்டின் அடித்தளமென
உயர்த்திச் சொல்வோம்!

உள்ளங்களால் உயர்ந்த சமூகமே
நாகரிக வளர்ச்சியின்
அடையாளமென வரலாறு பேசட்டும்...
வாழ்க்கை முழுவதும்
என்றும் இன்பம் பொங்கட்டும்!
— ரத்தினமூ

ஞாயிறு, 19 ஜூன், 2016


உலக யோகா தினம்

                                                     

                                                       உலக யோகா தினம் 

ஆய கலைகள் அறுபது நான்கு கலையே 
யோகாவும்  இதனில் அடங்கும் கலையே 
யோகிகளும், துறவிகளும் வளர்த்த கலையே 
நமது நாட்டினில் தோன்றிய  கலையே !


அனுதினம் யோகாசனங்களை செய்ய பழகுங்கள் 
அது உடலினை உறுதி செய்து, நோய் நீக்கும் இடமாகும் 1

உடற்பயிற்சியும், நடை பயிற்சியும் தினமும் மேற்கொள்ளுங்கள் 
அது  இளமை என்னும் ரகசியம் தோன்றும் இடமாகும் !

 யோகாசனங்களில்  பல வகைகள் உண்டு 
சில யோகாசனங்களே  மிகுந்த சிறப்புண்டு 
சிறுவர் முதல், முதியோர்கள்  வரை யோகா  பழகலாம் 
அனுதினம் இதனை கடைபிடித்தால் நோய்யின்றி வாழலாம் !

நோய்யற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம்,
யோகாசனங்களை செய்து உடல் நலனை பேணுங்கள் 
யோகாசனங்களின் நன்மையினை உலகிற்கு எடுத்துரையுங்கள் 
இதுவே உலக யோகா தினம் அறிவுறுத்தும் கருத்தென உணருங்கள் !

ரா.பார்த்தசாரதி