ஞாயிறு, 4 அக்டோபர், 2015
வியாழன், 24 செப்டம்பர், 2015
ராகுல் சீமந்தம்
ராகுல் சீமந்தம்
கடவுளுக்கும் பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே ,
கருவுற்ற மாதரசிக்கும் பூச்சூட்டல் உண்டு பாரினிலே
பூச்சூட்டல் என்பதோ திங்கள் ஐந்தும் ஏழின தொடக்கத்திலே
சீர்மிகு சீமந்தம் என்பதோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே
இன்று சீர் மிகு சீமந்தம் இறைவன் அனுகிரக்ஹத்தோடு
ஸ்ரீ குமரன் அனுகிரஹா மண்டபத்தில் இனிதே நடைபெறுகின்றதே
பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே ,
தாயாக மாறுவதும் அந்த தாய்மையாலே
இன்று திருமதி ஹரிணி ராகுலுக்கு பூச்சூட்டல்
ராகுலின் அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும், கொண்டவளாம் ,
என்றும் சீரும் சிறப்புடனும்
குடும்பத்தின் குல விளக்காய் திகழ,
பூச்சூட்ட வாருங்கள் ! பூச்சூட்ட வாருங்கள் !
மல்லிகை, முல்லை தலையிலே சூட்டி
மனமகிழ் சந்தனமும், பன்னிரும் தெளித்து
வளைகாப்பும், வளையலும், கையிலே அணிந்திட ,
தாயும், சேயும் வளம் பெற,
நல்மனம் கொண்டு நல்வாழ்த்தும், நல்லாசியும் கூறுங்கள்
திரு. ராமஸ்வாமி, உமா தம்பதியினரின் மூத்த மகனாம்
என்றும் அன்பும், பாசமும் மரியாதையும் கொண்டவனாய்
விளங்கும் ராகுல் பாரத்திற்கு இன்று சீர்மிகு சீமந்தம்
ஹரிணியும், ராகுலும், வாழ்கையில் வளம் பெற வாழ்த்துங்கள்
பூமிக்கு முகவரி தந்ததும் பெண்ணாலே
பூவிற்கு மணம் வந்ததும் பெண்ணாலே
பூமகள் ஹரிணி பூரிப்பு அடைவதும் தாய்மையாலே
பொன்மகள் ஹரிணி ராகுலை வாழ்த்துவோம் அன்பாலே !
ரா.பார்த்தசாரதி
கடவுளுக்கும் பூச்சூட்டல் உண்டு ஆழ்வார்களின் பாடலிலே ,
கருவுற்ற மாதரசிக்கும் பூச்சூட்டல் உண்டு பாரினிலே
பூச்சூட்டல் என்பதோ திங்கள் ஐந்தும் ஏழின தொடக்கத்திலே
சீர்மிகு சீமந்தம் என்பதோ திங்கள் ஆறும்,எட்டின் முடிவினிலே
இன்று சீர் மிகு சீமந்தம் இறைவன் அனுகிரக்ஹத்தோடு
ஸ்ரீ குமரன் அனுகிரஹா மண்டபத்தில் இனிதே நடைபெறுகின்றதே
பெண் முழுமை அடைவதும் தாய்மையாலே ,
தாயாக மாறுவதும் அந்த தாய்மையாலே
இன்று திருமதி ஹரிணி ராகுலுக்கு பூச்சூட்டல்
ராகுலின் அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும், கொண்டவளாம் ,
என்றும் சீரும் சிறப்புடனும்
குடும்பத்தின் குல விளக்காய் திகழ,
பூச்சூட்ட வாருங்கள் ! பூச்சூட்ட வாருங்கள் !
மல்லிகை, முல்லை தலையிலே சூட்டி
மனமகிழ் சந்தனமும், பன்னிரும் தெளித்து
வளைகாப்பும், வளையலும், கையிலே அணிந்திட ,
தாயும், சேயும் வளம் பெற,
நல்மனம் கொண்டு நல்வாழ்த்தும், நல்லாசியும் கூறுங்கள்
திரு. ராமஸ்வாமி, உமா தம்பதியினரின் மூத்த மகனாம்
என்றும் அன்பும், பாசமும் மரியாதையும் கொண்டவனாய்
விளங்கும் ராகுல் பாரத்திற்கு இன்று சீர்மிகு சீமந்தம்
ஹரிணியும், ராகுலும், வாழ்கையில் வளம் பெற வாழ்த்துங்கள்
பூமிக்கு முகவரி தந்ததும் பெண்ணாலே
பூவிற்கு மணம் வந்ததும் பெண்ணாலே
பூமகள் ஹரிணி பூரிப்பு அடைவதும் தாய்மையாலே
பொன்மகள் ஹரிணி ராகுலை வாழ்த்துவோம் அன்பாலே !
ரா.பார்த்தசாரதி
பெண்ணே நீதான்
பெண்ணே நீதான்
ஒரு உயிரைப் படைத்த கடவுளும் நீதான்
பாலுட்டி, சீராட்டி வளர்த்தவளும் நீதான்,
என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.
திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்
நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால் ஆலோ சனை கூறுபவளும் நீதான்
நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான்
மானிட சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய் இருப்பவளும் நீதான்
குடும்பத்தில் மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,
குடும்பத்தின் பல்கலைகழகமாய் திகழ்பவளும் நீதான் ,
பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் நீதான் .
ரா.பார்த்தசாரதி
சனி, 29 ஆகஸ்ட், 2015
பிரியமானவளே ! !
பிரியமானவளே !
திருவிழாவில் மாவிலை தோரணம் கட்டி
அழகாக அலங்கரிக்க கண்டேனே,
வானம் எனும் வீதியிலே நிலவும்,
நட்சத்திரங்களும் மின்ன
அவைகள் என்னை கவர்ந்ததே !
தோரணத்தில் ஆங்காங்கே பூக்களும்,
இலைகளும் செருகியதே ஓர் அழகு ,
உனது நறுமணமிக்க பார்வை என்னை விழுங்குகியதே
நீ நீர்தெளித்து கோலமிடும் பெண்களுடன் நின்றேன்,
கோலத்தை ஒளிப்படம் எடுக்கும்போது என்னை ரசித்தாய்
ஆடி மாத அம்மனுக்கு பொங்கல் இட
சுள்ளிகளை பெண்களுடன் சேர்ந்து தீயில் இட்டேன்
அந்த வெய்யில்லில் தூரத்து சூரியனாய் ஒளிர்ந்து நின்றாய்!
சாமிக்கு படைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை கொடுக்கும்போது
என் இதயம் இனிக்கிறது என்றாய்.
உன் சொல்லால் உலகமே இனித்தது எனக்கு .
மறுநாள் ஊருக்கு கிளம்புகையில்
திரும்ப எப்ப வருவே எனும் ஏக்க
விழியாலும், பார்வையாலும், என்னை நோக்கினாய்!
பிரியமானவளே, அப்போதுதான் புரிந்து கொண்டேன்
என் உடலை விட்டு என் உயிரை எடுத்து செல்கிறாய் என்று !
ரா.பார்த்தசாரதி
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
சும்மா கிடைக்கவில்லை நமக்கு சுதந்திரம்
தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் !
கண்ணீரும், ரத்தமும், கொடூரங்களும் கலந்த தேசமே
சுதந்திர தீயை உண்டாக்கியதும் நமது தேசமே !
தாய் நாட்டிற்கும், தியாகிகளுக்கும் முதல் வணக்கம்
உயிர் துறந்த தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம் !
தியாகிகளின் உயிர் தியாகத்தினை நினைந்துகொள்விர்
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நினைவு கொள்வீர் !
தாயின் மணிக்கொடி பறக்கவிட வாரீர்
அதனை தாழ்ந்து பணித்திட வாரீர் !
வண்ணங்கள் பலவாயினும், எண்ணங்கள் ஒன்றே
பறவைகள் பலவாயினும் வானம் ஒன்றே !
தேகம் ஒன்றானாலும் , குருதி ஒன்றே
பாஷைகள் பலவாயினும், தேசம் ஒன்றே !
சாதிமத வேற்றுமையை வேரோடு ஒழித்துடுவோம்
இந்தியன் என்ற உணர்வோடு இருந்திடுவோம் !
தேசம் உனக்கு என்ன செய்தது என நினைக்காதே
தேசத்திற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் !
தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்துடுவோம்,
தேசிய கீதம் பாடி சுதந்திரதினத்தைக் கொண்டாடுவோம் !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
ஜெய்ஹீந்த், ஜெய்ஹீந்த், ஜெய்ஹீந்த்,
ரா.பார்த்தசாரதி
சும்மா கிடைக்கவில்லை நமக்கு சுதந்திரம்
தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் !
கண்ணீரும், ரத்தமும், கொடூரங்களும் கலந்த தேசமே
சுதந்திர தீயை உண்டாக்கியதும் நமது தேசமே !
தாய் நாட்டிற்கும், தியாகிகளுக்கும் முதல் வணக்கம்
உயிர் துறந்த தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம் !
தியாகிகளின் உயிர் தியாகத்தினை நினைந்துகொள்விர்
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நினைவு கொள்வீர் !
தாயின் மணிக்கொடி பறக்கவிட வாரீர்
அதனை தாழ்ந்து பணித்திட வாரீர் !
வண்ணங்கள் பலவாயினும், எண்ணங்கள் ஒன்றே
பறவைகள் பலவாயினும் வானம் ஒன்றே !
தேகம் ஒன்றானாலும் , குருதி ஒன்றே
பாஷைகள் பலவாயினும், தேசம் ஒன்றே !
சாதிமத வேற்றுமையை வேரோடு ஒழித்துடுவோம்
இந்தியன் என்ற உணர்வோடு இருந்திடுவோம் !
தேசம் உனக்கு என்ன செய்தது என நினைக்காதே
தேசத்திற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் !
தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்துடுவோம்,
தேசிய கீதம் பாடி சுதந்திரதினத்தைக் கொண்டாடுவோம் !
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !
ஜெய்ஹீந்த், ஜெய்ஹீந்த், ஜெய்ஹீந்த்,
ரா.பார்த்தசாரதி
வியாழன், 6 ஆகஸ்ட், 2015
வாஷிங்டன் பயணம்
வாஷிங்டன் பயணம்
எங்களை வரவேற்றது வாஷிங்டன் விமான நிலையம்.
பன்னிர்த்துளிஎன தெளித்தது பனித்துளி .
சற்றே தயக்கமும் , நடுக்கமும் அடைந்தோம்
அமெரிக்காவின் மழைத்துளிக்கா? பனித்துளிக்கா?
இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்
மலர்கள் பல நிறங்களில் மிளிர்வதைகாண்கின்றோம்
மனிதர்கள்,முகமலர்ச்சியுடன் வரவேற்ப்பதை கண்டோம்
எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்!
பூத்து குலுங்கும் புதுமலர்கள் அசைய
புதிதாய் தளிர்த்து புன்னகை புரிய,
மகிழ்ச்சியில் நாங்கள் பூரிப்பு அடைய,
வரவேற்றியதே வசந்தமே வருக, வருக என.
ரா.பார்த்தசாரதி
தாய்ப் பால்
தாய்ப் பால்
தாய்க்கு மிஞ்சிய தெய்வம்மில்லை, தாய் பாலுக்கு மிஞ்சிய மருந்தில்லை
பிறந்த குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதை விரும்பிச் செய்யுங்கள்
ஆவின் பாளை விட தாய் பாலே சிறந்தது என நினையுங்கள்
தாய் பாலே நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும் என எண்ணுங்கள் !
தாய்ப்பால் கொடுப்பதாலே தாய் பாசம் மிகும் .
தாய்ப்பால் இல்லாத குழந்தை நோய்க்கு ஆளாகும்
தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்த உணவு
தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க கொடுக்கவும் நல்ல சத்துவுணவு !
உங்கள் கட்டுடலும், அழகும், குறையும் என் எண்ணாதீர்
குழந்தை வளமே உங்கள் வளம் என நினைந்திடுவிர்
புட்டி பாலை விட தாய்ப்பால் சிறந்தது என நினைத்திடுவிர்
தாய்ப்பால் கொடுத்து, தாய்ப்பால் தினத்தை மேம்படச் செய்யுங்கள் !
ரா.பார்த்தசாரதி
தாய்க்கு மிஞ்சிய தெய்வம்மில்லை, தாய் பாலுக்கு மிஞ்சிய மருந்தில்லை
பிறந்த குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதை விரும்பிச் செய்யுங்கள்
ஆவின் பாளை விட தாய் பாலே சிறந்தது என நினையுங்கள்
தாய் பாலே நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும் என எண்ணுங்கள் !
தாய்ப்பால் கொடுப்பதாலே தாய் பாசம் மிகும் .
தாய்ப்பால் இல்லாத குழந்தை நோய்க்கு ஆளாகும்
தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்த உணவு
தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க கொடுக்கவும் நல்ல சத்துவுணவு !
உங்கள் கட்டுடலும், அழகும், குறையும் என் எண்ணாதீர்
குழந்தை வளமே உங்கள் வளம் என நினைந்திடுவிர்
புட்டி பாலை விட தாய்ப்பால் சிறந்தது என நினைத்திடுவிர்
தாய்ப்பால் கொடுத்து, தாய்ப்பால் தினத்தை மேம்படச் செய்யுங்கள் !
ரா.பார்த்தசாரதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)