வியாழன், 24 செப்டம்பர், 2015

பெண்ணே நீதான்




                                        பெண்ணே  நீதான்


  ஒரு உயிரைப்  படைத்த  கடவுளும்  நீதான் 

  பாலுட்டி, சீராட்டி  வளர்த்தவளும் நீதான்,

   என்னோடு விளையாடி, அன்புகாட்டியவளும் நீதான்.

  திருமணப் பந்தலில், கைபிடித்த மனைவியாய் இருப்பவளும் நீதான்

 நான் வாழ்வில் கலக்கம் அடைந்தால்  ஆலோ சனை கூறுபவளும் நீதான் 

நான் மூப்பு அடைந்தால், என்னை மடியில் சுமப்பவளும் நீதான் 

மானிட  சக்தியின் மறு அவதாரமாய், பராசக்தியாய்  இருப்பவளும் நீதான் 

குடும்பத்தில்  மந்திரி, காதலி, தாய், மனைவி, ஆகிய பல பதவிகளும் நீதான்,

குடும்பத்தின் பல்கலைகழகமாய்    திகழ்பவளும்  நீதான் ,

பாரதி கண்ட  புதுமைப்  பெண்ணும்  நீதான் .


ரா.பார்த்தசாரதி 

   





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக