புதன், 11 ஆகஸ்ட், 2021

Sundanthira dinam 2021

யொரு 

                                                       சுதந்திரதினம்  (2021)


எழுபத்திநான்கு  ஆண்டுகள் முடிந்து எழுபத்தைந்தாம் ஆண்டில் அடிவைக்கின்றோம்! நாட்டன் நிலைமை அறிந்து
 செயல்படுகினறோமா ?எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா? , தனிமனிதன் ஒழுக்கத்தினால்  நோய்களை எதிர்த்தோமா
  தனி ஒரு மனிதனுக்கு உண்னணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் 
எனறார்  பாரதியார். ஆனால் அவ்வுணவினை அளித்திடும் விவசாயின் 
வாழ்க்கை தரம் உயர்ந்தத்தை  அறிந்தோமா ?
பாருக்குளே நல்ல நாடு  எங்கள் பாரத நாடு, ஞானத்திலே, பரமோனத்திலே,
மனதிலே  அன்னதானத்தில் காணத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே 
உயர் நாடு.

தாயின் மணிக்கொடி பாரீர், அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் !



சும்மா கிவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா ?

ஒரு பக்கம் மனித மேம்பாடு,தொழில் மற்றும் விஞ்ஞான  வளர்ச்சி ,
மறுபக்கம்  காட்டையும்,   விளை நிலங்களை அழிக்கும் முயற்சி ,
நிலங்களை கூறு போட்டு விற்கும் அவலத்தை தடுப்பாருண்டோ ?
அரசாங்கமே  இதற்கு துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ 

நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மை சுதந்திரம் 
பட்ட பகலில் பெண் தனிமையில் வருவதே இன்று மிக கடினம் ,
கொலையும், கொள்ளையும், பட்ட பகலிலே நடக்கின்றதே 
சுதந்திரத்தின் பெயரில், அநீதி எனும் நாடகம் நடத்தப்படுகின்றதே!

பல தியாகிகளின் உயிர்  அர்பணிப்பில்  சுதந்திரம் பெற்றோம் 
தேசத்திலும், அந்தமான், சிறைகளில் தியாகிகள்  பட்ட துன்பத்தை அறியோம் 
இதனை அறிந்தால் எல்லோர்க்கும் சுதந்திரத்தின் அருமை புரியும் 
சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை என உணர்ந்தாலே போதும் !

என்னதான் 75 ஆண்டுகள் முடிந்தாலும், மனிதன்  மாறனும் 
தனிஒழுக்கம்  கைக்கொண்டால் எந்த நோயினையும் அடக்கலாம் 
நமது நோய் தீர்க்கும் உடற்ப்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும் 
உணவே மருந்து மனதிற்கொண்டு, சத்துணவை பின்பற்றவேண்டும் 

சுதந்திரம் என்பது தந்திரமாக செயல்படுவது  அல்ல 
பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது காகிதத்தில் மட்டும் அல்ல 
நாட்டின் உரிமை சாசனம் எழுதி விட்டால் பெருமை  அல்ல 
தனி மனிதனின் உரிமையும், மேம்பாட்டையும் கொண்டதாகும் !

இளைஞ்சர்களே!  உங்கள் கையில்தான் சுதந்திரத்தின் வளர்ச்சி 
கொடுமைகளையும், அநீதிகளை கண்டு  எழுகின்ற  எழுச்சி 
தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவு கூறுங்கள் 
நாட்டினை நல்வழிப்பாதையில்  அழைத்துச் செல்லுங்கள் !


ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக