வியாழன், 12 ஆகஸ்ட், 2021

 


 Independence day 2021


சும்மா கிடைக்கவில்லை நமக்கு சுதந்திரம் 
தியாகிகளின்  தியாகத்தால் கிடைத்த சுதந்திரம் !

கண்ணீரும், ரத்தமும், கொடூரங்களும் கலந்த தேசமே 
 சுதந்திர தீயை உண்டாக்கியதும்   நமது  தேசமே !

தாய் நாட்டிற்கும், தியாகிகளுக்கும் முதல் வணக்கம் 
உயிர் துறந்த  தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம் !

தியாகிகளின்  உயிர் தியாகத்தினை நினைந்துகொள்விர் 
இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றை நினைவு கொள்வீர் !

தாயின்  மணிக்கொடி  பறக்கவிட  வாரீர் 
அதனை தாழ்ந்து பணித்திட  வாரீர் !

வண்ணங்கள் பலவாயினும், எண்ணங்கள் ஒன்றே 
பறவைகள் பலவாயினும்  வானம் ஒன்றே !

தேகம்  ஒன்றானாலும் , குருதி  ஒன்றே 
பாஷைகள் பலவாயினும், தேசம் ஒன்றே !

சாதிமத வேற்றுமையை  வேரோடு ஒழித்துடுவோம் 
இந்தியன் என்ற உணர்வோடு  இருந்திடுவோம் !

தேசம் உனக்கு என்ன செய்தது என நினைக்காதே 
தேசத்திற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள் ! 

தேசியக் கொடி  ஏற்றி  மரியாதை செய்துடுவோம்,
தேசிய கீதம்  பாடி சுதந்திரதினத்தைக் கொண்டாடுவோம் !

வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !     வந்தே மாதரம் !

ஜெய்ஹீந்த்,          ஜெய்ஹீந்த்,             ஜெய்ஹீந்த்,

ரா.பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக