சனி, 1 ஜூலை, 2017

திருமண நாள்




     
                                      திருமண நாள்


உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ
இலத்தரசனும், அரசியுமாக
மங்கலநாண் பூண்டிடும்
திருநாளே திருமண நாள்

திருமணம் என்பது இரு மனம் அல்ல 
அதுவே இரு மனம் கொண்ட ஒரு மனம்.
இருமனமும் புரிதலோடு வாழும்வாழ்க்கை 
வருடா வருடம், நினைத்து பெருமிதம் கொள்ளும் திருமணநாள் .

வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும்
ஆயிரங்காலப் பயிராக
கிளை பரப்பி செழித்து நிற்க
அஸ்திவார நாளே திருமண நாள்


கண்ட கனவுகள் நனவுகளாக
மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க
சமூகத்தில் புது அந்தஸ்து
பெறும் நாளே திருமண நாள்

சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க
வாழ்க்கை என்னும் பாதையில் நடக்க
இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில்
நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட
கருத்தொருமித்து மேன்மையான
எதிர்காலம் சமைத்திட
அடிகோலும் பெருநாளே
திருமணநாள்

ரா.பார்த்தசாரதி / கமலா பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக