செவ்வாய், 17 ஜனவரி, 2017

திருப்பாவையில் திவ்விய தேசங்கள்




                                       திருப்பாவையில் திவ்விய தேசங்கள் 

     பூமி தேவியின் அவதாரமாக பிறந்தவள்  ஸ்ரீ ஆண்டாள்.
     பெரிய்யாழ்வார் கருட அம்சமாகவும், ஆண்டாளின் வளர்ப்பு
     தந்தையாகவும் இருந்தார்.

      நூற்றியெட்டு திவ்விய தேசங்களை பண்ணியிரண்டு ஆழ்வார்கள்
     .மங்களசானம் செய்துள்ளனர் .   ஆண்டாளின், திருப்பாவையும், 
      வேதத்திற்கு  சமமாக கருதப்படுகிறது !

       ஆண்டாளின் முப்பது பாடல்களிலும் 108 திவ்விய தேசங்கள் 
       மேற்கோடிட்டு காட்டியுள்ளார் என்பதை திருப்பாவை பாடல்களால் 
        மறைமுகமாகவோ,யூகமாகவோ  நேரிடையாகவோ உரைப்பதைக் 
        காணலாம் !

        முதல் பாசுரம் :  மார்கழித் திங்கள், மதிநிறைந்த நன்னாளால் 
                                            பரமபத நாராயணனைக்  குறிப்பிடுவதாகும்.

        இரண்டாம் பாசுரம் :  வையத்துவாழ்விற்காள் ,பையத்துயன்ற 
                                               பரமனடி  க்ஷிராப்திநாதனை  குறிப்பிடுவதாகும் !

      மூன்றாம் பாசுரம் :  ஓங்கியுலகலந்த உத்தமன் பேர்பாடி என்பது 
                                               திருக்கோவிலூர்  த்ரிவிக்ர பெருமாளை  
                                              குறிப்பிடுவதாகும்.

 நான்காம் பாசுரம் :     ஆழிமழை கண்ணா, என்பது திருமோகுர் 
                                                காளமேகப் பெருமாளை குறிப்பிடுவதாகும்!

ஐந்தாம் பாசுரம்:         மாயனை என்னும் பாடல் வடமதுரை மைந்தனை 
                                             குறிப்பிடுவதாகும்!

ஆறாம் பாசுரம்:           புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் என்பது 
                                           திருவரங்கத்தில் வீற்றியிருக்கும் அரங்கநாதனையே 
                                           குறிப்பிடுவதாகும்.

ஏழாம்  பாசுரம்:       கீசு,கீசு,சென்றெங்கும்,தொண்டைமானுக்கு,பெருமாள்
                                         உபதேசித்த பேச்சரவமே  திருமலை திருப்பதியாகும் !

எட்டாம் பாசுரம்:     கீழ்வானம்  என்பது காஞ்சியில் உள்ள 
                                           தேவாதிராஜனை     குறிப்பதாகும் 1

ஒன்பதாம் பாசுரம்:   தூமணிமாடத்து சுற்றும் விளக்கெறிய என்பது 
                                            திருகுடந்தையையும், அதனை சுற்றியுள்ள தஞ்சை 
                                            மணிக்கோவில்,  கூடலூர்,கபிஸ்தலம்,புள்ளம்                                                             பூதங்குடி, ஆதனுர், திருவெள்ளியங்குடி, 
                                           திருவிண்ணகர், திருநறையூர், திருச்சேறை,நாதன் 
                                          கோவில், என்று அர்ச்சையிலே தசாவதாரமாக 
                                           திவ்விய தேசங்கள் சுற்றி விளக்கு எரிகின்றது 
                                          என்று குறிப்பிடுவதாகும். 

பத்தாம் பாசுரம்:     நோற்றுச்சுவர்க்கம் என்பது, திரு இந்தள்ளுர் ,
                                         திருமங்கை மன்னனுக்கு அனுகிரகித்து,இன்ன 
                                        வண்ணம் மென்று காட்டி, அருங்காலமே தேற்றமாய் 
                                       வந்து திற, என்பதற்கு பொருத்தமாகும் !

பதின்னொன்ராம் பாசுரம் :    கற்றுககறவை என்பது திருவாலி, நாங்கூர் 
                                                            திவ்விய தேசங்களை குறிப்பதாகும்.

பன்னிரெண்டாம் பாசுரம்:    கனைத்திளம் கற்று - ஆழ்வார்  திருநகரி .

பதிமூன்றாம் பாசுரம்: புள்ளின்வாய் கிண்டானை - திருவெள்ளியன்குடி   

பதினான்காம் பாசுரம்: உங்கள் புழக்கடை தோட்டத்து   வாவியுள் என்பது 
                                                   திருவெள்ளறை 

பதினைந்தாம் பாசுரம்:    எல்லே இளங்கிளியே என்பது 
                                                     திருவாய்ப்பாடியைக்  குறிப்பதாகும் .


பதினாறாம் பாசுரம்:      நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்பது 
                                                  துவாரகாவை  குறிப்பிடுவதாகும் 

பதினேழாம் பாசுரம்:     அம்பரமே தண்ணீரே  என்பது திருத்தண்கா -காஞ்சி
                                               -  தீப ப்ரகாஸர், வேதாந்த தேசிகனை நமக்கு
                                                 அனுகிரகித்தவர் .      

பதினெட்டாம் பாசுரம்:    உந்து    மதகளிற்றன் என்பது திருவயிந்திபுரத்தை 
                                                      குறிப்பதாகும் .   

பத்தொன்பதாம் பாசுரம்: குத்துவிளக்கெறிய என்பது திருநறையூரை 
                                                         குறிப்பிடுவதாகும்.

இருபதாம் பாசுரம்:        முப்பது மூவர், என்பது  திருநீர்மலையை 
                                                   குறிப்பிடுவதாகும் .

இருப்பதொன்று  பாசுரம்:  ஏற்றகலங்கள்  என்பது திருநாராயணபுரத்தை 
                                                        குறிப்பிடுவதாகும் .

இருபத்திரெண்டாம் பாசுரம்: அங்கண்மா ஞானத்தரசர் என்பது 
                                                              திருவந்தபுரம் அனந்த பத்மநாபனை
                                                             குறிப்பதாகும்.

இருபத்திமூன்றாம் பாசுரம்:  மாரிமலை  முழைஞ்சில் என்பது 
                                                             அஹோபில சிங்கபெருமாள் 

இருப்பதினான்காம்பாசுரம்:  அன்றிவ்வுலகமளந்தாய் போற்றி என்பது 
                                                             உலகளந்த பெருமாள் - காஞ்சி 

இருபத்தைந்தாம் பாசுரம் :    ஒருத்திமகனாய் பிறந்து, என்பது 
                                                             திருச்சித்ரகூடத்தை குறிப்பதாகும் 

இருபதியாராம் பாசுரம்   :     மாலே மணிவண்ணா  என்பது 
                                                           திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்.

இருபத்தேழுவது பாசுரம்:   கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்பது
                                                           திருமாலிரும்சோலையை குறிப்பதாகும் 

இருபத்தெட்டாம் பாசுரம் :  கறவைகள் பின்சென்று என்பது 
                                                         நைமிசாரண்யத்தை குறிப்பதாகும் 

இருபத்தொன்பதாவது பாசுரம்: சிற்றம் சிறுகாலே  என்பது 
                                                                தேரழுந்தூர் ஆமருவியப்பன் .

முப்பதாம் பாசுரம்:                  வங்கக்கடல் கடைந்த மாதவனை என்பது 
                                                            ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியாரே 
                                                          குறிப்பிட்டுளார் 

                                          
                                        ஆண்டாள் திருவடிகளே சரணம் 
===================================================================

ரா.பார்த்தசாரதி




                                                            




                                      
                                                   
                                                  
                                         
    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக