திங்கள், 10 அக்டோபர், 2016

சஷ்டிஅப்தபூர்த்தி வாழ்த்து மடல்



                                             ஷ்ஷடியப்தபூர்த்தி   வாழ்த்து மடல்

 ஷ்ஷடியப்தபூர்த்தி,  திரு.வாசுதேவனுக்கு 19-10-2016 நடைபெறயுள்ளது 
 நங்கநல்லூரில் உள்ள குருவாரப்பன் ஆஸ்திக சமாஜத்தில் நடக்கின்றது!

தந்தையும், மகனும் ஒரே நக்ஷ்த்திரம் (ரோகிணி) அமைவது சிறப்புடையதே,
தந்தைபோல் மகனும் சிறப்படைவான் என வரலாறு கூறுகின்றதே !

 பத்மா, வீரராகவன் (லேட்) ஐந்தாம் மகனாய் தோன்றிய வாசுதேவனே
 என்றும் சென்னையில்  வாழ்ந்திடுவாய்  சீரும், சிறப்புடனே !

அகவை அறுபதும், ஆயிரம் நிலவு காண்பதும் சிறப்புடையந்தன்றோ 
இவ்விழாவினை கோகுல் பொறுப்பேற்று நடத்துவதும் பெருமையன்றோ !

 சஷ்டிஅப்தபூர்த்தி என்றாலே ஆசி வழங்குவதாகும்,பெறுவதாகும் 
 அகிலத்தில் சிறந்தது தாய் தந்தையர்  ஆசிர்வாதமே  ஆகும் !

 குடும்பம் ஒரு கதம்பம் , குடும்பம்  ஒரு பல்கலைகழகம்,
குடும்பத்தை , ஆணிவேர் போல் தங்குவதும் தலைவனாகும்  !


காலமும் , கோலமும்  என்றும் மாறும்,
கணவன், மனைவி உறவே  என்றும் நிலைத்து வாழும் !

கணவன்  என்றாலே கண்ணை போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் 1


ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி, கணவனை மறப்பதில்லை !



வேலையும் செய்துகொண்டே  மற்றும் பகுதிநேர நடுவராய் (கிரிக்கெட்டில்) இருந்து நற்பெயர் பெற்றாய்,
ஒரே  மகன் நன்கு படித்து, நல்ல வேலையும் கிடைக்கப் பெற்றான் !




உலகில்  பிரிக்க முடியாதது  பந்தமும், பாசமும்,
உலகில் பிரிக்க முடியாது  நட்பும், உறவும் 1


உற்றாரும், உறவினரும்  ஒன்று கூடி விருந்துண்போம்
சிறியவர்களுக்கு ஆசி  வழங்கி,பெரியவர்களின்  ஆசியை பெற்றிடுங்கள்  !


  ரா.பார்த்தசாரதி  ( பாச்சு )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக