திங்கள், 8 செப்டம்பர், 2014

உலக எழுத்தறிவு தினம்



                                          உலக எழுத்தறிவு தினம்

எண்ணும்  எழுத்தும்  கண்னென தகும் .
எழுத்தறிவித்தவன்  இறைவன்  ஆகும்
கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
கற்றோருக்கு  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

மனிதனாய்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
நாட்டில்  எழுத்தறிவு பெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
இதனை கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்.!

பின்தங்கிய  இனத்தர்வரும், பாட்டளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதை கட்டயமாகக்க வேண்டும்
அதற்கான ஊடகங்களை கிராமங்கள்தோறும் எற்பட்டுத்தவேண்டும்
தாய் மொழியில் பயின்று கையொப்பம்  இட   அறியவேண்டும் !

எழுத்தறிவினை புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் !
இரவு நேர பள்ளிகள் மூலம் முதியோர்களுக்கும் எழுத்தறிவிப்போம்
 எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடு படுவோம் என
நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில் !   


ரா.பார்த்தசாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக