வியாழன், 4 செப்டம்பர், 2014

ஆசிரியர் தினம்




                    ஆசிரியர் தினம்


மாதா,பிதா, குரு  தெய்வம் 
மூவரும் கண்கண்ட தெய்வம்,
அன்பிற்கு அன்னை, அறிவுக்கு தந்தை,
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே !

மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை ,
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே  பெருமை,
மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணி,

ஏணியாய்  இருந்தவர்களுக்கு  என்றும் ஆசிரியர் எனும் பதவியே  !

ஆசிரியர்  பணி  மகத்தான பணியன்றோ,
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன்  பிறந்த நாளே  ஆசிரியர் தினமாக  அறிமுகமானதே!

அன்று இருந்த ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்தினார்,
இன்று  பணத்திற்காக ஆசிரியர்கள் வீட்டில் பாடம் நடத்துகின்றார்,
அன்று கல்வி அறிவுத்திறனுக்காக பாடம் கற்பிக்கப்பட்டது 
இன்று கல்வி என்பதே வியாபாரமாகவே   கருதப்படுகிறது !


அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை, 
அதிலும் தரமான கல்வியை  அளிப்பதே நாட்டின் கடமை,
வாழ்க்கையில், கல்வி  என்பது மனிதனின் இரு கண்கள,
கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதிர்கள்  ! 


ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக