வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நாய் வளர்ப்பு தினம்



                                                     நாய் வளர்ப்பு தினம்


    நாய்  எனும் விலங்கு  என்றும்  நன்றியுடையதே
     இன்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணியாக இருக்கின்றதே 
    நன்றி,    தியாகம்      இவற்றின் எடுத்துக்காட்டு
    வீட்டினை இரவும் பகலும் காக்கும் மெய்காப்பாளன்!

   திட்டும் போதும் நாயே என்று தவறு செய்தவரை திட்டுகிறோம் 
   அவசரத்தில்  வாயே நாயை மூடு என   திட்டுகிறோம் 
   அன்புடன் வளர்க வேண்டிய பிராணியை வசைபடுகிறோம்
   பணத்திற்காக  பிறரை மனசாட்சி இல்லாமல் புகழ்கின்றோம்!

   வீட்டிற்குள்  வளர்க்கப்படும்  ஓர்  நல்ல  விலங்கு 
   அதனை  நல்ல முறையில் வளர்க்கப்     பழகு 
   நீதான் அதன் எஜமான் என்று  தெரிந்து ஓடி வரும் 
   திருடர்களை கண்டால் அவர்களை ஓடி விரட்டிடும் !

   மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்த விலங்காகும் 
   அதுவே மரண பயத்தை போக்கும் கால பைரவரின் வாகனமாகும் !


  ரா,பார்த்தசாரதி

  
  
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக