திங்கள், 29 மார்ச், 2021

 



           

                          நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !


1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞன் இல்லை  
   நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பார்பதில்லை 

2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே
   மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   
      
3.
 மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே 
    மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே!
 
 4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ?
    அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

 5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய் 
     நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

 6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா !
     எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
      

  7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய் 
    நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !
      நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !


9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய்

    நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய் 
      நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                       

 



                          CHEERY BLOSSOM
The spring open its gate of Castle!
Flowers blossomed with distinct colors of Dazzle !
Wears on his smiling face and a dream of Spring !
All nature’s gift but mankind makes the rift !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever!

The Cheery Blossom display for our wish !
It cherish in mind and our thoughts are flourish !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !

From the Air and Peak, if we look down the pathway !
It seems to be the line of planted Nosegay !
Men may come and men may go,
But the Cherry Blossom Comes on forever !


R.Parthasarathy.

ஞாயிறு, 7 மார்ச், 2021

Ulaga Makalir dinam




                                                          உலக மகளிர் தினம் , 

        ஆண்டுக்கு ஆண்டு, தேதிக்கு  தேதி ஆயிரம் சுபதினம் 
        அடுத்தவர் நலத்தை நினைப்பவர்க்கே ஆயுள் முழுதும்  சுப தினம் 
       தைப்  பொங்கல் தினம், தமிழ்  வருட பிறப்பு தினம்,
        பிறந்த தினம்,  திருமண தினம், எல்லாம் வந்தாலும் 
        ஒற்றை தினம்  என்பதால் இன்று ஓய்ந்து போகுமோ  மகளிர் தினம்    

        வாழ்ந்தும்   உள்ளிருந்து மனம்,  பாராட்டும் குணம்.
        தோள்கொடுக்கும்  தோழமை ,
        எங்கே என தேடாதே !
        அன்புக்கு அடிபணி, ஆணவம் தகர் தெறி 
         தடைகளை புறம் தள்ளி, தலை நிமிர்ந்து செல் 
         பின்னிறைந்து வழி காட்டு, உள்ளிருந்து திறம் காட்டு 
         பெண் இனத்ததின்  மேன்மையை முன்னிறுத்தும் வழி காட்டு !

        ரா.பார்த்தசாரதி