புதன், 7 பிப்ரவரி, 2024

 


                                   சாய்ஸ்ரீ , வினோத்    

            கவிப்பரணியேறி  கலிங்கத்துப் பாடுகின்றேன் ,
            கேளுங்கள், கேளுங்கள் !
            ஆடிடும் அலையினில் ஏறிட்டும்  நுரையென
            பாடிடும்  பாட்டினில்  பண் ( இசை )  என, 

            எங்கள் தாய்மொழி தமிழில்
            மூன்றெழுத்திற்கு  என்றும் ஓர்  சிறப்புண்டு,
            மூத்தமிழ்  என்ற பெயருண்டு

            தாய் தன் பிள்ளைகளிடம்  காட்டும் பரிவே    அன்பு 
            அன்பிற்கும் மூன்றெழுதுதான்
            தந்தை தன்  மகனுக்கு ஊட்டும் ஊக்கமே அறிவு 
            அறிவிற்கும்   மூன்றெழுதுதான்   
            குரு தன் மாணவர்களுக்கு அளிப்பதோ ஆன்ற கல்வி 
            கல்விக்கும் மூன்றெழுதுதான்
            பக்தன் இறைவனிடம் கொள்வதோ  பக்தி
            பக்திக்கும்  மூன்றெழுதுதான்  
            கவிஞ்சன்   கவிதையை பாங்குற உரைப்பதே யுக்தி 
             யுக்திக்கும் மூன்றெழுதுதான்  
             குழந்தையின்  சிரிப்பே  மழலை 
             பூக்களின்   சிரிப்பே  மணம் 
             நாடு நலம் பெற வேண்டின்
             நாட வேண்டும் நல்லவர்  நட்பு 
             படை வீரர்கள்  திறமையே  வீரம் 
             பெண்டிர்க்கு  அணிகலனே   கற்பு 
             மனிதன் நல்லதை செய்ய தேவை  நல்ல மனம் 
             கைம்மாறு  எதிர்பாராமல் செய்வதோ வள்ளல் குணம   

             எங்கள் அன்பு செல்ல பெண் சாய்ஸ்ரீ  மூன்று எழுத்து 
             எங்கள் அன்பு மருமகன் வினோத்  மூன்று எழுத்து 
              அவர்கள் எல்லா செயல்களிலும்  வெற்றி  எனும் 
             மூன்றுஎழுத்தினை அடைய வேண்டும் .

             ரா.பார்த்தசாரதி - 8148111951
                 

                                 
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக