வெள்ளி, 14 ஏப்ரல், 2023

thamizh puththaande

 




     தமிழ்ப்புத்தாண்டே  வருக ! இன்பத்தை தருக !

கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான் ,
புலரும் புத்தாண்டை சோபக்ருது  எனப்  பெயரிட்டான் 1

பூமியெங்கும்  அமைதியே ஆட்சியாக அமையாத புத்தாண்டே ,
மண்ணில் விழும் மழைத்துளியும், விண்ணில் வீசும் காற்றும் 
யாவருக்கும்  பொதுதானே புத்தாண்டே !

நதியால் இணைந்த  மாநில மக்கள் 
அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே !

எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே 
மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் புத்தாண்டே !

வஞ்சத்தையும், வன்மத்தையும் அகற்றிவிடு 
மன்னிக்கத்தெரிந்த  மனிதனாய் மாறிவிடு 

நாட்டுக்கு நாடு, சமாதனத்தை  போற்றிடு 
வேற்றுமையில் ஒற்றுமை காண வெற்றிக்கொடி  காட்டிட்டு  !


ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
ஏக்கத்தை  தீர்காதோ  புத்தாண்டே !

பூமியெங்கும் அமைதி மட்டும் 
ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே !

ரா.பார்த்தசாரதி 

----------------------------------------------------------------------------------------------------------------------------------


                                 

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக