திங்கள், 24 ஏப்ரல், 2023

சீமந்த வாழ்த்து மடல்

 




                             

                                              சீமந்த  வாழ்த்து மடல் 

இடம்: அபிராமி மினி ஹால்                               தேதி: 04-05-2023
              கிழக்கு தாம்பரம், சென்னை -59.

சிறப்புமிகு  சீமந்தம்  திங்கள் ஆறிலும், எட்டிலும், அமைவதே 
 அருமை பூச்சூடலோ  திங்கள் ஐந்திலும் ஏழிலும் அமைவதே 
பெண் பெருமை  அடைவதும்  தாய்மையாலே,
தாயாக  மாறுவதும்  அந்த   தாய்மையாலே!


ஜெயந்தின் மனைவி காயத்ரிக்கு  சீமந்தம் ! 
ஜெயந்தின்  அன்பு மனைவியாம்,
பாசமும், நேசமும்  கொண்டவளாம் ,
வண்டலூரில்  இனிதே ஜெயந்துடன்   வசிப்பவளாம் !
என்றும் சீரும் சிறப்புடன் 
குடும்பத்தின் குலவிளக்காய்  திகழ,
அவள்தன்  இனிய இல்லத்திற்கு ,
பூச்சூட்ட வாருங்கள், பூச்சூட்ட வாருங்கள் !


மல்லிகை, முல்லை, தாழம் என பல மலர்கள் பூச்சூட்டி,
மணம்  கமிழ், சந்தனமும்,  பன்னீரும்  தெளித்து,
 வண்ண வளையல்களை கைய்யிலே அணிவித்து,
வலையோசை அவள் பிள்ளைக்கும், கணவனுக்குமே சொந்தம் 
அவள் தன்  வாழ்வில் எல்லா வளம் பெற,
நலங்கிட்டு, நன்மனம் கொண்டு இன்றே வாழ்த்திடுங்கள் !  

தாயும், சேயும்  நலம் பெற, நன்மகளை   பெற்று தர,
காயத்ரியை  நன்மனம் கொண்டு  வாழ்த்துவோம் !

பூமிக்கு முகவரி வந்ததும் பெண்ணாலே !
பூவிற்கு நறுமணம் வந்ததும் பெண்ணாலே !
பூமகள் ( காயத்ரி ) பூரிப்பு அடைந்ததும் தாய்மையாலே !
பொன்மகள் என(காயத்ரியை ) வாழ்த்திடுவோம்  அன்பாலே !

ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக