புதன், 22 செப்டம்பர், 2021

Aasiriyar dinam 2021


                                            






                                    ஆசிரியர்   தினம்


மாதா,பிதா, குரு  தெய்வம் 1
மூவரும் கண்கண்ட தெய்வம்,
அன்பிற்கு அன்னை, அறிவுக்கு தந்தை,
கல்விக்கு ஆசான் (குரு) என உலகம் அறிந்ததே !

மனித வாழ்கையில் கல்விக்கே முதன்மை ,
இதனை நமக்களித்த ஆசிரியர்களுக்கே  பெருமை,
மனிதனின் உயர்வுக்கு அவர்கள் அமைத்த ஏணிப்படி 
ஏணியாக இருந்த ஆசிரியர்  கல்விக்கு ஓர்  பாலமாகும் 1

ஆசிரியர்  பணி  மகத்தான பணியன்றோ,
அவர்களை நினவு கொள்வது நமது கடமையன்றோ,
ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராய் இருந்தவரே,
அவர்தன்  பிறந்த நாளே  ஆசிரியர் தினமாக கொண்டாடினரே 1

அன்று இருந்த ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்தினார்,
இன்று கல்வி  கைபேசி,மடினி , காணொளி  மூலம்  காண்கிறோம் 
அன்று கல்வி அறிவுத்திறனுக்காக பாடம் கற்பிக்கப்பட்டது 
வாழ்க்கையில், கல்வி  என்பது மனிதனின்  ரு கண்  போற்றப்பட்டது 
பிட்சை புகினும்  கற்கை நன்றே  என ஆன்றோரால்  கூறப்பட்டது 1

அறிவுத்திறன், கல்வித்திறன் இரண்டும் நாட்டிற்கு வளமை, 
அதிலும் தரமான கல்வியை  அளிப்பதே நாட்டின் கடமை,
வாழ்க்கையில், கல்வி  என்பது மனிதனின் இரு கண்கள,
கல்வியை அளிக்கும் ஆசிரியர்களை என்றும் மறவாதிர்கள்  ! 
அன்னை,பிதா,குரு  என மூவரையும் மறக்க முடியுமா 
இம்மூவரும்  இல்லாமல்  நம்  வாழ்க்கை  வளம்பெறுமா !




ரா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக