வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

Nayagaarah Nathiye




                           நயகராவே  நீ  ஒரு  அருவியா ! நதியா ! நங்கையா !
             

        1.நதியையும்      நங்கையையும்    பற்றி  எழுதாத  கவிஞனஇல்லை 
           நதியினை  காண வரும்  மனிதர்களும்  ஜாதி மதம்   பாரதில்லை 

       2.இறைவன்  படைத்த கவிதை  மனிதன்தானே 
           மனிதன் படைத்த  கவிதை, நதியும், நங்கையும் தானே !   

      3. மேகம்  போன்ற மேனியும் ,  இளமைகொண்ட  நங்கைப்போலே

          மலைமேடு, பள்ளம் மூடி, ஓடுகின்றாய்  நாணத்தினாலே

      4. நதியே  நீயும்  ஒரு  பெ ண்தானோ ? 

          அருவி  எனும்  கூந்தலையும் , எழிலையும் காட்டுவதும்  ஏனோ ?

      5. நதியே !  நீ  அருவியாய்  நின்று  புன்முறுவல்   பூக்கின்றாய்

        நாடி வரும் மனிதனின்  மனதில் ஓர்  தேன்னருவியாய்  வீழ்கின்றாய் !

     6  நதியே  நீ  நடந்தால்  நங்கை !  குனிந்தால்  குமரி யல்லவா
        எல்லோர்க்கும் என்றும் நீ ஒரு  தாய் யல்லவா !
     
    7.நதியே  நீ  அருவீயாய்  விழுந்து , நதியாய்  ஓடி கடலில் கலக்கின்றாய்         நங்கையின்  பிறவியோ என்றும் பாசத்துடன்  வாழ்வில்  கலக்கின்றாள் !

    8.  நதியே   நீ  உன்  ஓட்டத்தால்  ஒளி  தருகின்றாய்   !

       நங்கையோ   வாழ்க்கை எனும் நதியில்  ஓளி  பெறுகிறாள் !

   9. நதியே   நீ உறவை நாடி கடலில் கலக்கின்றாய

       நங்கையோ , ஓர்  உறவை  தேடி  மனதில் கலக்கின்றாள் !

10.வெண்ணிற ஆடையணிந்து, வானவில்லை  ஏந்தி நின்றாய்

     நீலநிற ஆடை அணிந்த  மனிதர்களுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி  தந்தாய் !

       ஆம்,  நயகரா  நதியே  என்றும் நீ  ஒரு  நங்கைதான் ! 

                                                                                                   ரா. பார்த்தசாரதி 

                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக