ஞாயிறு, 3 டிசம்பர், 2017

திருமணம் என்றால்





          திருமணம்  என்றால்
                    திருமாங்கலியத்தில்   9 (ஒன்பது ) இழைகளின்  தத்துவம்  
1.  உள்ளத்தை  உள்ளபடி புரிந்து கொள்ளுதல்  2.  மேன்மை  3. ஆற்றல்    
4.  தூய்மை   5. தெய்வீக  குணம்   6. உத்தமமான குணம்  
7.விவேகம்   8.  தன்னடக்கம்   9. தொண்டு.
==================================================================

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த
                                               வீட்டிற்கு.
இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது
                                                    புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு –          தெய்வத்திற்குப் பயந்தவள்
=================================================================

தாலி :                 தாலியே பெண்டிற்கு வேலி .
                               தாயாகி தாலாட்டு பாட கணவன் தரும் பரிசு .
கூரை புடவை/ மாங்கல்ய தாரணப் புடவை 
                                மணமகள், திருமகளாய் விளங்குவதற்கும், கற்பையும் 
                                 குலத்தை  காக்கவும்  புடவை உடுத்தப்படுகிறது
  
தோடு:               எதையும் காதோடு  போட்டுக்கொள், வெளியே சொல்லாதே.
மூக்குத்தி :     வாசனையும், சமையல் அறியும் உத்தியும்,
                             முன்யோசனையுடன், எதையும் செய்வாயாக என்பதை
                             உணர்த்துகிறது .
வளையல் :        கணவன் உன்னை வளைய,வளைய வரவேண்டும்
                                 என்பதற்காக.
ஒட்டியாணம்:  கணவன் மனைவி  இருயிர்  ஓர் உயிராய் இருபதற்காக
                                 அணிவிக்கப்படுகிறது .
மோதிரம்:          எதிலும் உன் கைத்திறன்  காட்டுவதற்காக
                                 அணிவிக்கப்படுகிறது
மெட்டி      :          திருமணம் ஆனவள் என்பதையும், தீய சக்திகள்
                                 அவளை நெருங்காமல் இருக்க, அணிவிக்கபடுகிறது
---------------------------------------------------------------------------------------------------------------

சப்தபதி - ஏழு அடிகள் பெண்ணுடன் நடப்பது 

"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"
"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"
"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"
"நான்காவது அடியில்: சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்"
"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"
"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர  
  வேண்டும்"
"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"
--------------------------------------------------------------------------------------------------------- 
கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டியவை 

*   நல்லுறவு அனுசரித்தல்,   பரிபூரண அன்பு,
    ஒருவர் மீது ஒருவர் அக்கறை  காட்டுதல் ,
*   உயர்வு  தாழ்வு  இல்லாத  நட்பு 
*  சின்ன தவறுகள் மறந்து  கருணையுடன் நடத்தல்.
*  தேவைப்படும்போது  பாராட்டுதல்.
--------------------------------------------------------------------------------------------------------------

தொகுத்தவர் : ரா.பார்த்தசாரதி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக