சனி, 2 செப்டம்பர், 2017







                                                           சதாபிஷேக  விழா

இடம்: மயிலை கல்யாணநகர் அசோசியேஷன்           தேதி:07-09-2017
                       
மயிலை கல்யாணநகர் அசோசியேஷனில்   இன்று ஓர் சதாபிஷேக விழா 
திருமதி  ஸ்ரீமதி,  திரு.எம்.கே .ஸ்ரீனிவாசனின்  சதாபிஷேக  விழா !

திருமதி &  திரு. மாடபூஷி கோதண்டராமனின் .முதன்மை  மகனே 
என்றும்  திருவல்லிக்கேணியில்  வாழ்ந்திடுவாய்  சிறப்புடனே !

அகவை  அறுபதும், எண்பதும்  என்றும்  சிறப்புடையதன்றோ

மகள் ஸ்ரீலேகாவும்,ஸ்ரீகாந்தும் தலைமையேற்று நடத்துவதும் பெருமைக் குறியதன்றோ !

கல்யாணம் என்றாலே வைபோகமே,
வாரணமாயிரம்  பாடி வாழ்த்துவோமே !

ஆயிரம்  நிலவு (பௌர்ணமி) கண்ட இல்லற தம்பதிகளே,
என்றும் வாழ்வாங்கு வாழ்வீ ர்கள்  வையத்திலே !


கூட்டுறத்துறையில் ஓய்வுவடைந்து,,வழக்ககறிஞராய் தொழில் செய்கிறாய் எண்பதிலும்  சுறு,சுறுப்புடன்  தெய்வநம்பிக்கையோடு பணி புரிகின்றாய்  ! ,

கணவன் என்றாலே  (கண் + அவன் ) என்பதாகும்.,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !

ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !

திருமதி ஓர் வெகுமதி என்று கூறுவது பழக்கம் 
திருமதியின்  பெயரே  ஸ்ரீமதி  என்று அழைப்பது பழக்கம்!

கல்யாணம் என்றாலே உற்றார் , உறவினர்ககளின் , ஆசிர்வாதமே,
அகிலத்தில் சிறந்தது , தாய், தந்தையின்  ஆசிர்வாதமே !

காலமும், கோலமும்   என்றும் மாறும்,.
கணவன்  மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்.!

உற்றார், உறவினர்களும், பேரன்,பேத்திகளும் ஆசி பெறட்டும் 
வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆசியை நல்மனதுடன அளிக்கட்டும்!

அன்பும்  அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை 
பண்பும் பயனும் அது.   என்பது  வள்ளுவன் வாக்கு 
===================================================================

                                   சதாபிஷேக  மந்த்ரம் 

 சந்த்ராணாம் து ஸஹஸ்ரஸ்ய தர்சனாத்பு விமானவ: |
ப்ரபௌத்ர தர்சனாத்வாபி ஸர்வபாபை: ப்ரமுச்யதே ||

ஸீமந்தஜஸ்ய புத்ரஸ்ய புத்ரஸ்ஸீமந்தஜஸ்து ய: |
தஸ்யாபி தாத்ருச: புத்ர: ப்ரபௌத்ர: புண்யவர்தன்: ||

ஸஹஸ்ரம் சசினாம் த்ருஷ்ட்வா பூர்வோக்தம் ச ப்ரபௌத்ரகம் |
மஹத்புண்யம் அவாப்னோதி தே வைரபி துராஸதம் ||

சதா பிஷே சனாத்லோகே லோக பூஜ்யத்வம்ருச்சதி |
ச்ரியம் ப்ராப்னோதி விபுலாம் ஸ்வர்கம் அந்தேச கச்சதி ||


ஸஹஸ்ர சந்த்ர தர்சனம் கண்டு
சதாபிஷேக சாந்தி செய்து கொண்ட
ப்ரம்ஹ ஞான லக்ஷ்யவாதிகளுக்கு


​​
அனந்த கோடி நமஸ்காரங்கள்.
================================================================== 


ரா. பார்த்தசாரதி , .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக